கோவை, செப்.21- கோவை சிறையில் வார்டன், கைதி மோதலில் 4 வார்டன்கள் படுகாயம டைந்தனர். இவர்களை கோவை மருத் துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவை, மத்திய சிறையில், வியாழ னன்று சிறை வளாகத்தில் வார்டன் களுக்கும், கைதிகளுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத் தில் கைதிகளால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்த ராகுல், மோகன்ராம், பாபு ஜான், விமல் ராஜ் ஆகியோர் மீட்கப் பட்டு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டனர். முன்னதாக, சிறை வளாகத்தில் உள்ள மரங்களில் ஏறிக் கொண்ட கைதிகள் கைகளில் பிளே டால் கீறிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதைய டுத்து அவர்களை சமாதானப்படுத்திய சிறை காவலர்கள், காயமடைந்த கைதி களான தினேஷ், அய்யனார், அழகர் சாமி, ஹரிகரன், கிஷோர் குமார், உதய குமார், அரவிந்த் ஆகிய 7 பேருக்கு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவம னையில் முதலுதவி சிகிச்சை அளித்த னர். சிறை வளாகத்தில் நிழ்ந்த அசா தாரண சூழலைத் தொடர்ந்து சிறைத் துறை துணைத் தலைவர் சண்முகசுந்த ரம் சிறைத் துறை வார்டன்கள் மற்றும் கைதிகளுக்கு இடையே நிகழ்ந்த திடீர் மோதல் சம்பவத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத் தினார். சிறை வளாகத்தில் திடீரென நடந்த மோதல் சம்பவத்தால் அங்கு பர பரப்பான சூழல் நிலவி வருகிறது.