உதகை, மார்ச் 17- உதகையில் பெய்த திடீர் மழையால் குளு குளு கால நிலை ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகையில் பனி பொழிவுக்கு பின் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பகல் நேரங்களில் வெயி லின் தாக்கம் அதிகரித்தது. சமவெளி பகுதிகளிலும் சுட் டெரிக்கும் வெயிலால் ஊட்டிக்கு வார நாட்களை தவிர பிற நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித் தது. உதகையில் வெள்ளியன்று திடீரென பெய்த கன மழை ஒரு மணி நேரம் நீடித்தது. திடீர் மழையால் உதகை நகரம் குளிர்ந்து இதமான காலநிலை நிலவியது. சுற்றுலா தலங்களுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மழைக்கு குடை பிடித்துக் கொண்டு வந்து சுற்றுலா தலங்களை ரசித்தனர். உதகையில் அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சி யஸ், குறைந்தபட்சம் 9 டிகிரி செல்சியஸ் காணப்பட் டது. வால்பாறையில் பலத்த மழை கோவை மாவட்டம், வால்பாறையில் கடந்த சில தினங் களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் புதனன்று காலை முதல் மாலை வரை அவ் வப்போது சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு இத மான காலநிலை நிலவி வருகிறது. வருகின்ற நாட்களி லும் கோடை மழை பெய்வதற்கான கால சூழ்நிலை இருந்து வருகிறது. கடந்தாண்டை போல் இல்லாமல் இந்த ஆண்டு முன்கூட்டியே கோடை மழை பெய்து வருவதால் ஜூன் மாதத்தில் கிடைக்க வேண்டிய தென்மேற்கு பருவ மழையும் அதிகளவில் கிடைப்பதற்கு வாய்ப்பு உள் ளது. கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக ஒரு மாதமாக வறண்டு கிடந்த வனப் பகுதியை ஒட்டிய நீரோடைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேல்நீராரில் 22 மி.மீ மழையும், வால்பாறையில் 21 மிமீ மழையும், சோலையாறு, கீழ் நீராரில் தலா 1 மி.மீ மழையும் பெய்துள்ளது.