districts

img

ஊர்க்காரர்களே வேடமிட்டு நடைபெற்ற தெருக்கூத்து

ஊருக்குள் பிணி அண்டாது என் கிற நம்பிக்கையுடன் ஊருக்குள்  இருப்பவர்களே வேடமிட்டு தொன்று தொட்டு நடைபெறும் தெருக்கூத்து, இந்த வருடமும் விடிய விடிய மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள வெள்ளிகுப்பம்பாளையத்தில் நடை பெற்றது. இந்திய கலை வடிவங்களில் மிக வும் தொன்மையானது தெருக்கூத்து என்கிற கலை வடிவம். தமிழகத்தின் நாட்டுப்புற கலைகளின் உன்னத வடிவமாக நடத்தப்பட்டு வரும் தெருக்கூத்து, நம் பாரம்பரிய கலைகளில் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. திறந்தவெளி இடங் களில் தெருக்களின் சந்திப்பில் களம்  அமைத்து நடத்தப்படுவதால் இக்க லைக்கு தெருக்கூத்து எனப்பெயர்  பெற்றது. இது ஒரு பொழுதுபோக்கு  கலையாக மட்டுமின்றி, மக்களுக்கு தெரிந்த கதைகள், தெரியாத வரலா றுகள், நீதி போதனைகள் தெருக் கூத்து வாயிலாக தகவல் பரிமாற்றம்  செய்யப்பட்டன. இந்திய விடுதலை  போராட்ட காலத்தில், மக்களை ஒரு முகப்படுத்த இந்த தெருக்கூத்துக் கலை பெரும் பங்காற்றியுள்ளது.  இந்நிலையில், இன்றும் தெருக் கூத்து கலையை தங்களது வாழ்வின்  ஒரு அங்கமாக, தங்களின் நோய் தீர்க் கும் மருந்தாக கருதி கடந்த இருநூறு  ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு தோறும் ஊர் கூடி விடிய விடிய தெருக் கூத்தை நடத்தி மகிழ்கிறது வெள்ளிக் குப்பம்பாளையம் கிராமம்.  கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையத்தையடுத்துள்ள வெள்ளிகுப் பம்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் உள்ளது. இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு கொல்லை நோய் என்றழைக்கபட்ட பிளேக் உள்ளிட்ட நோய்கள் தாக்கி பல நூறு பேர் இறந்து போயினர். வீடு தோறும் மரணங்கள் தொடர்ந்த அக்காலகட்டத்தில் மக்களுக்கு நம் பிக்கையும் ஆறுதலையும் அளிக்கும்  வகையில் இரணியன் நாடகம் என்ற தெருக்கூத்து நடத்தப்பட்டுள்ளது. பக்த பிரகலாதனின் கோரிக்கையை  ஏற்று திருமால் நரசிம்ம அவதாரத் தில் வெளிவந்து தீமையின் அடையா ளமான இரணியனை அழிப்பதாக இந்த  இத்தெருக்கூத்து வடிமைக்கப் பட்டுள்ளது.

இந்த நாடகத்தால் அன்று தங்களது ஊரை பிடித்த பிணி  மெல்ல மெல்ல விலகி மகிழ்ச்சி திரும் பியதாக தெரிவிக்கும் வெள்ளிக்குப் பம்பாளையம் கிராம மக்கள், அன்று  முதல் பல தலைமுறைகளை கடந் தும் தொடர்ந்து பொங்கல் பண்டிகை யின் போது இந்த தெருகூத்து நாட கம் நடத்தப்பட்டு வருகிறது. முதல் நாள் மாலை ஆறு மணிக்கு துவங் கும் இரணிய நாடக தெருக்கூத்து இரவு முழுவதும் தொடர்ந்து அடுத்த  நாள் காலை சூரிய உதயத்திற்கு  பின்பு இரணியன் கொல்லபடுவதாக வும், இதன்பின்னரே இறைவன் கோபம் தணிந்ததாக இந்நிகழ்ச்சி நிறைவடைகிறது. முழுக்க முழுக்க பகதூர் கிராமத் தினரே இத்தெருக்கூத்தில் வேட மிட்டு நடிக்கின்றனர் என்பது குறிப்பி தக்கது. மேலும், இக்கிராமத்தை சேர்ந்தவர்கள் எந்த பகுதியில் வேலை நிமித்தமாக இருந்தாலும் சரி,  அல்லது வெளிநாடுகளில் வாழ்ந்து வந்தாலும் இத்தெருக்கூத்து நடத்தப் படும் நாளில் தவறாமல் தங்களது கிராமத்தை வந்தடைந்து நிகழ்வில் பங்கேற்கின்றனர். சிறு குழந்தைகள் முதல் வயதான  பெரியவர்கள் வரை வெட்டவெளி யில் கொட்டும் பனியினையும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஊர்  மக்கள் அனைவரும் இத்தெரு கூத்தை விடிய விடிய கண்டு ரசிக்கின் றனர்.  இத்தெருக்கூத்தினால் பிணி அண்டாமல் இருக்கிறதோ என் னவோ, ஆனால், இவர்களின் அசை யாத நம்பிக்கை இன்று வரை தொன் மையான கலை வடிவமான தெருக் கூத்தை வாழவைத்து கொண்டிரு கின்றது. -இர.சரவணபாபு