districts

img

வெண்மணி நினைவு தினம் அனுசரிப்பு

வெண்மணி நினைவு தினத்தையொட்டி கோவை இருகூர் பகுதியில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயலா ளர் வி.இராமமூர்த்தியிடம் இருகூர், கூட்செட், சூலூர் கிளைகள் சார்பில் கட்சியின் வளர்ச்சிக்காக வீடு, வீடாக  வசூலிக்கப்பட்ட ரூ.35 ஆயிரம் நிதி ஒப்படைக்கப்பட் டது.

ஆனைமலை ஒன்றியத்தில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் நடத்திய வெண்மணி நினைவேந்தல் நிகழ்ச்சியில் சங்கத்தின் மாவட்ட தலைவர் துரைசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  

மதுக்கரை ஒன்றியம் செட்டிபாளையத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைச்செயலாளர்  யு.கே.சிவஞானம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

;