districts

தமிழகத்தில் தூய்மைப் பணியாளர் ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும்! தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் பேச்சு

திருப்பூர், டிச.4- தமிழகம் முழுவதும் தூய்மைப் பணியாளர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும், ஒப்பந்த தூய்மை பணி யாளர் முறையை ஒழிக்க வேண்டும் என தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தெரிவித்தார். திருப்பூர்  மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில், தேசிய தூய்மைப் பணி யாளர் ஆணையத் தலைவர் வெங்க டேசன் தலைமையில் அண்மையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.  இதில் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி,  மாவட்ட காவல் கண் காணிப்பாளர் சசாங் சாய், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உட் பட பலர் பங்கேற்றனர்.  இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் பங்கேற்று பேசி னர். அப்போது, திருப்பூர் மாநகராட் சியின்  4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. ஆயிரத்து 924 தூய்மைப்  பணியாளர்கள் உள்ளனர்.

பெரும் பகுதியினர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணி யாளர்கள். மாவட்டத்தில் தூய்மைப்  பணியாளர்கள் தவிர, 265 ஊராட்சி களில் தூய்மைக் காவலர் பணியாற்றி வருகின்றனர். பலர் ரூ.3ஆயிரத்து 600 சம்பளம் பெறுபவர்கள். திருப்பூர் மாந கராட்சியில் 2012-ம் ஆண்டு 134 பேர் பணியில் சேர்ந்தனர். 2019-ம்  ஆண்டு ரூ. 17 ஆயிரம் சம்பளம் வழங்கி னர். 8 பேர் மட்டும் நிரந்தரம் செய்யப்பட் டனர். எஞ்சியவர்களுக்கு உயர்த்தப் பட்ட சம்பளத்தை வழங்காமல், ரூ. 6  ஆயிரம் மட்டும் தருகின்றனர். பணிச்சுமை அதிகரித்திருப்ப தால், பகுதி நேர ஊழியர்கள் என்ற போதிலும், முழுநேரமும் பணியாற்றக் கூடிய சூழல் ஏற்படுகிறது. மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் சரியாக நடந்திருந்தால், பல பிரச்சினைகள் தீர்ந்திருக்கும். மாவட்டம் முழுவ தும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி  மற்றும் ஊராட்சிகளில் அனைத்து  ஒப்பந்த தூய்மைப் பணியாளர் களுக்கு இலவச காப்பீடு திட்டத்தை  அமல்படுத்த வேண்டும். தாட்கோ  கடனுதவி, பிரதமரின் அனை வருக்கும் வீடு திட்டத்தில், தூய்மைப் பணியாளர்களுக்கு வீடுகள் வழங்க வேண்டும். திருப்பூர் பல்லடம் சாலை, தாராபுரம் சாலையில் தூய் மைப் பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் சுகாதாரமான கழிவறை கள், குப்பை எடுப்பது மற்றும் போதிய சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண் டும். தூய்மைப் பணியாளர்கள் குடி யிருப்புகளில் போதிய குடிநீர் வச தியை மாநகராட்சி ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.

இதில் தேசிய தூய்மைப் பணியா ளர் ஆணையத் தலைவர் வெங்கடே சன் பேசியதாவது: தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையம் 1993-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. நிரந்த ஊழியர் களுக்கு ஓய்வூதியம், முன் வைப்புத் தொகை உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கும். ஆனால் தற்காலிக ஒப் பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் தொடங்கி பல்வேறு பிரச் சினைகள் இருக்கும். அரசு ஒரு சம்பளம் சொல்லியிருந்தால், தற்கா லிகமாக பணியாற்றுபவர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் குறைந்த சம்பளம் வழங்குவார்கள். முன் வைப்பு நிதி, இஎஸ்ஐ உள்ளிட்ட பலன்கள் எதுவும் இல்லை. அதேபோல் சிலர் பிடித்தம் செய்வதாக சொல்லும் தொகையும், ஒப்பந்ததாரர் மாறிவிட்டால் அந்த தொகையும் கிடைக்காது. தூய் மைப் பணியாளர்கள் பயப்படத் தேவையில்லை. இது போன்ற பிரச்சினைகளை களைந்து உரிய நடவ டிக்கை எடுக்கப்படும். ஆகவே வெளிப் படையாக சொல்லலாம். இந்த கூட்டம் நடப்பது தொடர்பாக கூட தூய்மைப்  பணியாளர்களுக்கு தகவல் அளிக்கா மல் இருப்பது வேதனையளிக்கிறது.   ஒப்பந்ததாரர்கள் ஈரோடு மாந கராட்சியில் வழங்குவது போன்று, இஎஸ்ஐ,  முன் வைப்பு நிதி தொடர் பான ரசீதை மாதந்தோறும் வழங்க வேண்டும். அனைவருக்கும் வங்கி யில் பணம் செலுத்தும் வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். கையில் பணம் தரக்கூடாது என்றார்.

இதையடுத்து செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: இதில் தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு குறைகளை  சுட்டிக்காட்டியுள்ளனர். நடவடிக்கைகள் எடுக்கப்படும். முறை கேடுகளில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து ஆய்வு செய்ய குழு அமைக் கப்படும். தூய்மைப் பணியில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் தொழிலாளர் ்களின் நிலை அறிய, நீதிபதி தலைமை யில் குழு அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கி றோம். தமிழகம் முழுவதும் ஒப்பந்த் தூய்மை பணியாளர் முறையை ஒழிக்க வேண்டும். இதனால் தூய்மைப் பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். லாபம் ஈட்டக்கூடிய தூய்மைப் பணியை அரசே நடத்த வேண்டும். அதேபோல் தமிழகத்தில், தூய்மைப் பணி ஆணையம் அமைக்க வேண்டும். பாலியல் புகார் காங்கயம் நகராட்சி முன்னாள் ஆணையர் மீது, பெண் தூய்மைப் பணியாளர்கள் புகார் அளித்திருந் தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. தூய்மைப் பணியாளர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் தொடர்பாக உரிய  விழிப்புணர்வு ஏற்படுத்த நடவ டிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்த முன் களப் பணியாளர்களுக்கு உரிய, நிவாரணத் தொகை மற்றும் ஊக்கத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.