இருகூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கங்கள் சார்பில் காதலர் தின கொண்டாட் டங்கள் நடைபெற்றது. இதில், காதல் திருமணம் செய்து கொண்ட வர்களை முன்னிலைப்படுத்தி, கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிகழ்வில், மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜோதிமணி, இடை கமிட்டிச் செயலாளர் லலிதாமணி, இருகூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் ஸ்டாலின் குமார், ராஜேஸ்வரி, டாஸ்மாக் சங்க நிர்வாகி விஜயராகவன், வாலிபர் சங்க கிளைச் செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.