districts

img

ஓய்வூதியர்களுக்கு மருத்துவக்காப்பீடு அரசாணையை அமல்படுத்திட வலியுறுத்தல்

தாராபுரம், டிச.20- ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீடு அரசாணையை அமல்படுதிட  வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி  மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய் வூதியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம் செவ்வாயன்று நடைபெற் றது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும்  ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதி யர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக் கைகளை நிறைவேற்றக்கோரி தாராபு ரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆ.மணியன் தலைமையில்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் இரா.ஞானசேக ரன் கோரிக்கைகளை விளக்கி பேசி னார்.  ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெறும்  நாளில் தற்காலிகப் பணிநீக்கம் என்ற  நடைமுறை முற்றிலும் கைவிடப்பட வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலைமை யில் 2 மாதங்களுக்கு ஒருமுறை சீரான  இடைவெளியில் ஓய்வூதியர் குறை தீர்வு கூட்டத்தினை நடத்தவேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்களின் ஊதிய நிர்ணயம் தொடர்பான அர சாணை எண் 417 ல் உள்ள குறைபாடு களைக் களைந்து திருத்திய ஆணைகள்  வெளியிட வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் இள நிலைப் பொறியாளர்களுக்கு உதவிப் பொறியாளர்களுக்கு இணையான ஊதிய விகிதம் அனுமதித்து ஆணை யிட வேண்டும்.  

ஓய்வுபெறும் நிலை யில் உள்ளோர் தொடர்பான ஆண்டு  தணிக்கையினை முன்னுரிமை அளித்து  மேற்கொள்ளுதல் வேண்டும். ஊராட்சி  ஒன்றிய பணி ஓய்வூதியர்களுக்கு  மருத்துவக்காப்பீடு திட்டம் செயல்ப டுத்த வெளியிடப்பட்ட அரசாணையை  தாமதமின்றி விரைவாக அமல்படுத்திட  வேண்டும். காப்பீட்டு திட்டஅடையாள அட்டை உடன் வழங்க வேண்டும். உள் ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநில  செயலாளர் ராஜகோபாலன் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் கி.மேகவர் ணன், கி.சீரங்கராயன், க.சண்முகம், க. வெள்ளைச்சாமி, பீர்ஜாபர் உள்ளிட்ட  ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் பொ. நாகேஸ்வரன் நன்றி தெரிவித்தார்.