districts

img

பெரியூர் மலைகிராம அரசுப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட வலியுறுத்தல்

தருமபுரி ஆக-24, பெரியூரி மலை கிராம அரசுப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந் துள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பிக்கிலி ஊராட்சி பெரியூர் உயர் நிலைப்பள்ளி மேலாண்மைக் குழு  கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் வெங் டேசன் தலைமைவகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அன்பரசு ஊர் தலைவர் பெருமாள் வார்டு உறுப்பி னர்கள் தங்கம் ,ராஜாமணி ஆகியோர் பங்கேற்று பேசினர்  பள்ளி மேலாண்மை கட்டமைப்பு தேர்தலில் பள்ளிமேலாண்மைக்குழு தலைவராக பழனியம்மாள், துணைத் தலைவராக சண்முகம் உள்ளிட்ட 24  பேர் கொண்ட உறுப்பினர்கள்  தேர்வு செய்யப்பனர். கூட்டத்தில் பெரியூர் உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட டம்,சுற்றுச்சுவர்,குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர் வாகம்  நிறைவேற்றவேண்டும். மாண வர்களின் கற்றல் திறனை மேம்படுத் துவது என முடிவு செய்யப்பட்டது. அதேபோல் பாப்பாரப்பட்டி அரசு  மேல்நிலைப் பள்ளி பள்ளி மேலாண் மைக்குழு உறுப்பினராக வே.விசுவநா தன் தேர்வு செய்யப்பட்டார்.