districts

img

அரசு பள்ளிகளை தத்தெடுத்த பல்கலைக்கழகங்கள் ஆட்சியர் தலைமையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை, ஜூன் 29- கோவையில் 150 அரசு பள் ளிகளை அண்ணா, பாரதி யார், வேளாண் பல்கலைக் கழகங்கள் தத்தெடுப்பதற் கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் புத னன்று நடைபெற்றது. கோவை மாவட்டம், பார தியார் பல்கலைக்கழகத்தில் புதனன்று, கல்லூரிக்கனவு எனும் தலைப்பில் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற் றது. இதைத்தொடர்ந்து, 150 அரசுப்பள்ளி களை தத்தெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந் தம் ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பேசுகையில், 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மற்றும்  கருத்தரங்கானது மிகவும் பயனுள்ளதாக வும்,  வாழ்க்கைக்கு வழிகாட்டும் தினமாக இருக்கும். அண்ணா பல்கலைக்கழகம், பார தியார் பல்கலைக்கழகம், வேளாண்மை பல் கலைக்கழகம் ஆகியவற்றை சார்ந்த 40  கல்லூரிகள், 150 அரசுப்பள்ளிகளை தத்தெ டுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற் றது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் வருகின்ற இரண்டு வருடங்களுக்கு இப்பள்ளிகளை தத்தெடுத்து, பள்ளி மாணவ, மாணவிகள் படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராகும் வகையில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இத்திட்டம் தொடர்பாக பல்கலைக்கழ கம், கல்லூரிகளுக்கு ஆலோசனைகள் வழங் கப்பட்டு 10 நாட்களில் பல்வேறு கல்லூரி கள் ஆர்வத்தோடு முன்வந்து, இந்த புரிந் துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளப்பட் டுள்ளன. இரண்டு வருடங்களுக்கு பள்ளி களை கல்லூரிகள் தத்தெடுக்கும். இந்த ஒப் பந்தத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றிய கல் லூரிகளுக்கு விருதுகள் வழங்கப்படவுள் ளன. பள்ளியிலே மாணவ, மாணவிகளுக்கு  தேவையான வழிகாட்டுதல், பயிற்சிகள் வழங் கும்போது வருங்காலத்தில் திறமையான மாணக்கர்களை உருவாக்க முடியும். இந்த ஒப்பந்தத்தில் கலை மற்றும் அறிவியல் கல் லூரி, கலைக்கல்லூரிகள், பொறியியல் கல் லூரிகள் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகள் பங்கு கொண்டுள்ளனர். இக்கல்லூரிகளின் செயல்பாடுகள் குறித்து ஒவ்வொரு மாத மும் ஆய்வு மேற்கொள்ளப்படும். வரு கின்ற நாட்களில் இன்னும் கூடுதலான கல் லூரிகள் இந்த ஒப்பந்தத்தில் இணைய விருப் பம் தெரிவித்துள்ளதாக, ஜி.எஸ்.சமீரன் தெரி வித்தார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் பாரதியார்  பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் முருக வேல், முதன்மைக்கல்வி அலுவலர் ந.கீதா, விரிவாக்கம் மற்றும் வேலை வழிகாட்டித் துறை தலைவர் மற்றும் பேராசிரியர் முனை வர் அ.விமலா உட்பட மாணவ, மாணவி கள் பலர் கலந்து கொண்டனர்.