districts

img

சிறு, குறு தொழில்கள் நசிவுக்கு ஒன்றிய அரசே காரணம்!

கோவை, பிப்.10- சிறு, குறு தொழில்களின் நெருக் கடிக்கு ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளே காரணம் என கனி மொழி எம்.பி., கோவையில் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார். கோவை பீளமேட்டில் உள்ள தனியார் அரங்கத்தில், திமுக நாடா ளுமன்ற தேர்தல் அறிக்கை தயா ரிப்பு குழு கோரிக்கை மனுக்களை  பெற்றனர். குழுவின் தலைவர் எம்பி  கனிமொழி தலைமையில் இந்த  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை, நீலகிரி மாவட் டத்திற்கு உட்பட்ட தொழில் துறை யினர், கல்வியாளர்கள், மீனவர் கள்,சிறு,குறு தொழில் முனை வோர்கள், புலம்பெயர்ந்த தொழி லாளர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர் கள்,தொண்டு‌நிறுவனங்கள், அரசு  மற்றும் தனியார் துறை ஊழியர் கள், பொதுமக்கள் மற்றும் கழக நிர் வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப் பினரையும், நேரடியாகச் சந்தித்து மனுக்களை பெற்றனர். இதனைத்தொடர்ந்து கனி மொழி எம்பி.,  செய்தியாளர்களிடம் பேசுகையில், கன்னியாகுமரியில் தொடங்கி மாவட்ட வாரியாக மக் களை சந்தித்து கோரிக்கைகளை யும் பெற்று வருகிறோம். அதே சம யம் தொழில அமைப்புகள், விவசா யிகள், பல்வேறு சங்கங்கள் உள் ளிட்டவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து தேர்தல் அறிக்கை உரு வாவதற்கான பணியை மேற் கொண்டு வருகிறோம். மக்களும், தொழில் அமைப்பினரும் எங்களை சந்தித்து வருகின்றனர். மீதமுள்ள பகுதிகளுக்கும் விரைவில் சென்று கோரிக்கைகளை பெற இருக்கிறோம். மேலும்  கோவையில் மட்டுமல்ல தமிழ் நாடு முழுவதும் தொழில அமைப் பினர் குறிப்பாக, சிறு குறு தொழில்  செய்பவர்கள் ஒன்றிய அரசின் தவ றான கொள்கையால்நெருக்க டியை சந்தித்து வருகின்றனர். பண  மதிப்பிழப்பு,  ஜிஎஸ்டி, கொரோனா போன்ற காலங்களிலும் பிரச்சனை கள் தொடர்கிறது. சிறு,குறு தொழில் அமைப்பினர் மிகப்பெ ரிய பாதிப்புகளுக்கு உள்ளாகியுள் ளனர். குறிப்பாக ஜி.எஸ்.டியில் நிறைய சிக்கல்கள் உள்ளது. அதை  கட்ட முடியாமல் சிறு குறு அமைப்பி னர். தொழில் செய்ய முடியாத  சூழ்நிலைகளில் இருப்பதாகவும் கோரிக்கைகளில் குறிப்பிட்டுள்ள னர். இவை அனைத்தும் தேர்தல்  அறிக்கையில் கொண்டு வருவதற் கான பணிகளை மேற்கொள்வோம் என்றார். மேலும், ஞாயிறன்று விளை யாட்டு துறை அமைச்சர் ஆயிரம்  கோடி மதிப்புள்ளான குடிநீர் திட் டத்தை திறந்து வைப்பதற்காக வரு கிறார். கோவை புறக்கணிக்கப் படுவதாக சொல்லப்படும் குற்றச் சாட்டை முழுமையாக மறுத்த  கனிமொழி, பல தொழிற்சாலைக ளுக்கு கோவை  மையமாக உள் ளது. கோவையில் முன்னாள் முதல மைச்சர் கருணாநிதி தான் இங்கு  பல தொழில் கூடங்களை உருவாக்கி னார். பல பன்னாட்டு நிறுவனங்கள் கோவை வருவதற்காக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டும், முதலீடுகளை கொண் டுவருதற்கு பணி செய்து வருகிறார்.  மேலும் தொழிலாளர்கள்  வைக் கக்கூடிய கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்காக தொடர்ந்து முயற் சிகள் நடைபெற்று வருகிறது. தேர் தல் அறிக்கையில் என்ன வரும் என் பதை முதல்வர் தான் முடிவு செய் வார் என்றார்.  முன்னதாக, திமுக தேர்தல் தயா ரிப்பு குழுவின் தலைவர் கனிமொழி  கருணாநிதி எம்பி.,யிடம் கோயம் புத்தூர் எம்எஸ்எம்இ அசோசியே சன் தலைவர்கள் தி.மணி, கி. பாண்டியன், அ.விஸ்வநாதன், மு. பரமேஸ்வரன், ஏ.சக்திவேல், சி.தன பால், மீ.ஜோதிபாசு, வி.தெய்வேந் திரன் உள்ளிட்டோர் சிறுகுறு தொழில்கள் சந்திக்கும் பிரச்சனை கள் குறித்த மனுவினை அளித்த னர்.