கோவை, ஆக.30- மாற்றாந்தாய் மனப்போக்குடன், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக ஒன்றிய மோடி அரசு செயல்படுவதாக திருச்சி சிவா எம்.பி கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா வெள்ளியன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகை யில், தமிழகத்திற்கு நியாயமாக தர வேண்டியதை கூட ஒன்றிய அரசு தர மறுக்கிறார்கள். முதல்வர் கடிதம் எழுதி னார். எங்களைப் போன்றவர்கள் தனிப் பட்ட முறையில் கோரிக்கை வைக்கி றோம். ஒரு கண்ணுக்கு வெண்ணை யும், இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம் பும் வைக்கக்கூடாது. தமிழகம் சிறப் பாக செயல்படக் கூடிய மாநிலம். பல துறைகளில் முன்னிலை வகிக்கிறோம். வட மாநிலங்களுடன் ஒப்பிடும்பொழுது பல வகைகளில் முன்னிலையில் இருக் கிறோம். மாற்று கட்சி என்ற மன நிலை யுடன் ஒன்றிய அரசு பார்க்கிறது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. கொல்கத்தா விவகாரத்தில் ஒன்றிய அரசு அக்கறை காட்டுவதில் தவ றில்லை. மணிப்பூரில் நடைபெற்ற வன் முறை சம்பவங்கள் பாலியல் சம்ப வங்கள் குறித்து பாஜக கவலைப்பட வில்லை. உள்துறை அமைச்சர் இது குறித்து அறிக்கை கூட சமர்ப்பிக்க வில்லை. நாட்டு மக்கள் இந்த ஒன்றிய அரசின் செயல்பாடுகளை பார்த்து எடை போட வேண்டும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம் பிக்கலாம். இவர்கள் வரலாம், வரக் கூடாது என நினைக்கும் உரிமை யாருக்கும் இல்லை. தமிழக அரசு தன் கடமையை சரி யாக செய்கிறது. பல குறியீடுகளில் முதலி டத்தில் இருக்கிறோம். உயர் கல்வி சேர்க்கையில் இந்தியாவில் சராசரியை விட அதிக அளவில் உயரத்தில் இருக் கிறோம். தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு டன் பிரச்சனை இல்லை. கடமைகளை செய்ய உரிமைகளை எதிர்பார்க்கி றோம். போராடுகிறோம். ஒன்றிய அரசு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறோம், என்றார்.