கோவை, ஏப்.29– கோவையில் காதல ளர்களை மிரட்டி பணம் வசூலித்து வந்த இரண்டு போலீசார் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். கோவை நீலம்பூர் பகுதி யில் உள்ள நட்சத்திர விடுதி அருகே செவ்வாயன்று காரில் அமர்ந்து காதலர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் காவலர் உடையில் வந்த இருவர், காதலர்களை மிரட்டி ஒரு லட் சம் ரூபாய் பணம் கேட்டுள்ளனர். பணம் கொடுக்கவில்லை என்றால் காரில் விபச்சா ரம் செய்வதாக கூறி கைது செய்வோம் என மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன காதலர்கள் தங்களிடமிருந்த 10 ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அந்த காதலர்கள் புகாரளித்தனர். இதையடுத்து சூலூர் காவல் துறையி னர், தனிப்படை அமைத்து காதலர்களி டம் பணம் பறித்த நபர்கள் குறித்து விசா ரணை மேற்கொண்டு வந்தனர். இதில், காதலர்களிடம் பணம் பறித்தது, கரு மத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக உள்ள ராஜராஜன் மற்றும் ஆயுதப்படை காவலர் ஜெகதீஷ் என் பது தெரியவந்தது. மேலும், இவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காதலர் களை மிரட்டி பணம் வசூலித்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவ லர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத் தனர்.