districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு  கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது

திருப்பூர், ஜன. 20 - ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் திருப்பூருக்கு கஞ்சா  கடத்தி வந்த இருவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்த னர். திருப்பூருக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக மாநகர  மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த  தகவல் அடிப்படையில் வெள்ளியன்று ஆந்திராவில் இருந்து  வந்த ரயிலில், கையில் மூட்டையுடன் இறங்கிய இரண்டு வாலி பர்களைப் பிடித்து போலீசார் சோதனை செய்தனர். போலீசார்  சோதனையில் அந்த வாலிபர்கள் வைத்திருந்த பையில் 8  கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீ சார் அந்த வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். போலீசார்  விசாரணையில் அவர்கள் விருதுநகரை சேர்ந்த பழனிவேல்  (24), திண்டுக்கல்லை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (33 ) என்ப தும், அவர்கள் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து திருப்பூர் போயம்பாளையம் பகுதி யில் உள்ள வியாபாரியிடம் கொடுத்து விற்பனை செய்ய  இருந்ததாக தெரிய வந்தது. இதையடுத்து மாநகர மதுவி லக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து, பழனிவேல், ராஜேஷ் கண்ணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும்  அவர்கள் விற்பனைக்காக எடுத்து வந்த 8 கிலோ கஞ்சாவை  பறிமுதல் செய்தனர்.

ரூ.7.94 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி, ஜன.20- அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு  விற்பனை சங்கத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 12, 266 கிலோ பருத்தி கொண்டு வந்திருந்தனர். இதில்,  ஆர்.சி.எச்.  பி.டி. ரகப்பருத்தி கிலோ ரூ. 60 முதல் ரூ.69 வரையிலும், கொட் டுரக (மட்டரக) பருத்தி கிலோ ரூ. 20 முதல் ரூ.30 வரையிலும்  ஏலம் போனது. மொத்தம் ரூ.7 .94 லட்சத்திற்கு பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்றது.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வளர்ப்பு தந்தைக்கு 20 ஆண்டு சிறை

திருப்பூர், ஜன. 20 - ஏழு வயது சிறுமியிடம் பாலியன் வன்கொடுமையில் ஈடு பட்ட வளர்ப்புத் தந்தைக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சிவசக்தி நகரை சேர்ந்த  40 வயது கூலித் தொழிலாளி, ஏற்கனவே திருமணமான பெண் ணுடன் குடும்பம் நடத்தி வந்தார். அந்த பெண்ணுக்கு முதல்  கணவர் மூலமாக 7 வயது மகள் உள்ளார். இந்தநிலையில் கடந்த 2022 மார்ச் 19 அன்று அந்த தொழிலாளி தனது மகள்  முறையில் உள்ள 7 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவில்  ஈடுபட்டார். இதுகுறித்து சிறுமி தனது தாயாரிடம் தெரிவிக்க,  அவர் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்  அளித்தார். அதன் பேரில் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக் குப்பதிவு செய்து அந்த தொழிலாளியை கைது செய்து சிறை யில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட  மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் வெள்ளி யன்று தீர்ப்பு  கூறப்பட்டது. மகள் முறையில் உள்ள சிறுமிக்கு  பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்பு தந்தையான தொழிலாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை,  ரூ.2,500 அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார். இந்த  வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி  வாதாடினார்.

மரபுசாரா மின் உற்பத்தி கட்டமைப்பை ஏற்படுத்த  குறைந்த வட்டியில் கடன் வழங்க கோரிக்கை

திருப்பூர், ஜன.20- சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மரபுசாரா  மின் உற்பத்தி கட்டமைப்பை ஏற்படுத்த குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும்  என சென்னையில் நடைபெற்ற தொழில்து றையினருடனான கருத்து கேட்பு கூட்டத்தில்  திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். நிதி மற்றும் மனித வளம் மேம்பாட்டு துறை  அமைச்சர் தங்கம் தென்னரசு, சிறு குறு மற்றும்  நடுத்தர தொழில் துறை அமைச்சர் தாமு.அன் பரசன் ஆகியோர் தலைமையில், சென்னை யில் 2024 - 2025 ஆம் ஆண்டு நிதி ஆண்டுக்கான  தொழில்துறையினர் கருத்து கேட்புக் கூட்டம்  நடைபெற்றது. இதில், பங்கேற்ற திருப்பூர் ஏற் றுமதியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இக்கூட்டத்தில் பேசிய திருப்பூர் ஏற்று மதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம். சுப்பிர மணியம், இந்திய ஜவுளி தொழிலை மேம்ப டுத்த பின்னலாடை வாரியம் அமைக்க வேண் டும். மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்.  திருப்பூரில் உள்ள 18 பொது சித்திகரிப்பு நிலையங்கள் மற்றும் 100 தனியார் சுத்திக ரிப்பு நிலையங்களுக்கு மரபுசாரா மின் உற் பத்தி கட்டமைப்பை ஏற்படுத்த மானியத்து டன் குறைந்த வட்டியுடன் நீண்ட கால கடன்  வழங்க வேண்டும். பனியன் தொழிலாளர் களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய வீடு கள் கட்டிக் கொடுக்க வேண்டும். திருப்பூரில்  மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற  தொழில்நுட்ப மையத்தை ஆடை தயாரிப்பு மற்றும் மேம்பாட்டு கண்டுபிடிப்புகளுக்காக அமைத்து தர வேண்டும். டெக்ஸ்டைல்ஸ் திட்டங்களுக்கு 100 சதவீதம் முத்திரை வரி  விளக்கு அளிக்க வேண்டும் உட்பட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.

சிஆர்பிஎப் வீரரை தாக்கிய 2 பேர் கைது

தருமபுரி, ஜன.20- தருமபுரி, பெரும்பா லையை அடுத்த தளிஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (43). சிஆர்பிஎப் வீர ரான இவர், கடந்த சில தினங் களுக்கு முன்பு, உறவினர் ஒருவரின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக, சொந்த  ஊருக்கு ரமேஷ் வந்துள் ளார். இந்நிலையில், ரமேஷ் வீட்டின் வாசலில் அமர்ந்தி ருந்த போது, சாலையில் குழந் தைகள் விளையாடிக் கொண் டிருந்தனர். அப்போது 2 வாலிபர்கள் இருசக்கர வாக னத்தில் அதிவேகமாக வந் துள்ளனர். அவர்களை ரமேஷ் தடுத்து நிறுத்தி, குழந்தை கள் விளையாடிக் கொண்டி ருப்பதால், மெதுவாக வாக னத்தை இயக்குமாறு கூறி னார். இதனால் அவர்களி டையே வாக்குவாதம் ஏற்பட் டுள்ளது. இதில் ஆத்திரம டைந்த 2 பேரும், ரமேஷை  தாக்கியுள்ளனர். இதுகு றித்து, பெரும்பாலை போலீ சார் வழக்குப்பதிவு செய்து, கோடல்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ், விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்த னர்.

தருமபுரிக்கு ரூ.699.17 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

தருமபுரி, ஜன.20- உலக முதலீட்டாளர்கள் மாநாட் டின் மூலம் தருமபுரி மாவட்டத்துக்கு  ரூ.699.17 கோடி மதிப்பில் புதிய முதலீ டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதென மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட  செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது, உலக முதலீட்டாளர்கள் மாநாட் டில் தமிழ்நாட்டில் ரூ.6,64,180 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட் டுள்ளன. இதில் தொழில்துறையில் 3,79,809, ஆற்றல் துறையில் 1,35,157, நகர்ப்புற வீட்டுவசதி மேம்பாடு 62,939, தகவல் தொழில்நுட்பத் துறையில் 22,130, குறு, சிறு மற் றும் நடுத்தர தொழில்துறையில் 63,573 முதலீடுகள் கொண்டுவரப்பட் டுள்ளன. இதன் மூலமாக நேரிடை யாக 14,54712 நபர்களுக்கும், மறை முகமாக 12,35,945 நபர்களுக்கும் வேலைவாய்ப்பு ஏற்படும். தருமபுரி மாவட்ட தொழில் முதலீடுகள் மாநாடு கடந்தாண்டு நவ.22 ஆம் தேதியன்று நடைபெற்றது. இதில் தருமபுரியில் உள்ள தொழில் வாய்ப்புகளை பயன்படுத்தி தரும புரி மாவட்டத்தில் சுமார் ரூ.546 கோடி  மதிப்பிலான முதலீடுகளை மேற் கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட் டது. இதனைத்தொடர்ந்து ஜன.7, 8  ஆம் தேதிகளில் சென்னையில் நடை பெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தருமபுரி மாவட்டத் துக்கு 47 தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.699.17 கோடி மதிப்பில் புதிய  முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப் பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் நேரிடையாக 2,567 வேலைதேடுபவர்கள் தருமபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெற  உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

உதகையில் நாற்று நடவுப் பணிகள் துவங்கியது

உதகை, ஜன.20- கோடை சீசனுக்காக உதகையில் உள்ள  அனைத்து பூங்காவிலும் மலர் செடிகளை நாற்று நடவுப் பணிகள் துவங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங் களில் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் உத கைக்கு வருகின்றனர். இதனால், சுற்றுலாப்  பயணிகளை மகிழ்விக்கும் வகையில்,  நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பூங் காக்களும் தயார் செய்யப்படும். இதற் காக ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா  பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட  அனைத்து பூங்காக்களிலும் முன்னதாக மலர்  நாற்றுகள் நடவு செய்யப்படும். அந்த  நாற்றுகளில் ஏப்ரல், மே மாதங்களில் பல  வண்ணங்களில் மலர்கள் பூத்து குளுங் கும். அதனை சுற்றுலா பயணிகள் கண்டு  ரசித்து செல்வது வழக்கம். இந்நி லையில், கோடை சீசனுக்காக தோட்டக்க லைத் துறை சார்பில் தற்போது அனைத்து பூங்காக்களையும் தயார் செய்யும் பணி தீவிர மாக நடந்து வருகிறது. இதனையொட்டி, ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு  செய்யப்பட்டு அதனை பராமரிக்கும் பணி யில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதே போல் குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட் டேரி பூங்காவிலும் நாற்று நடவு பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இதில் பூங்கா பாதைகளில் நடவு செய்வதற்காக மேரி கோல்ட் மற்றும் உட்லண்ட்ஸ் மலர் செடிகள் உற்பத்தி செய்யும் பணியில் ஊழியர் கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஓரிரு  நாட்களில் இந்த மலர் செடிகள் அனைத் தும் பூங்காவில் உள்ள பாத்திகளில் நடவு  செய்யப்படும் என ஊழியர்கள் தெரிவித்துள் ளனர்.

குழந்தையின் தாயை தேடும் போலீசார்

கோவை, ஜன. 20- பேருந்து பயணத்தில், இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணிடம் குழந்தையை கொடுத்த பெண் மாயமான நிலையில், குழந் தையின் தாயை கண்டறிய போலீசார் முயற்சி  மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திவ்யா, கோவையில் தங்கி ஆடிட்டிங் பயின்று வருகி றார். இவர் வெள்ளியன்று சொந்த ஊர் செல்வ தற்காக காந்திபுரத்தில் இருந்து ரயில் நிலை யத்திற்கு தனியார் நகர பேருந்தில் வந்து கொண்டிருந்தார். பேருந்தில் கூட்டம் அதிக மாக இருந்த நிலையில், அருகில் குழந்தை யுடன் நின்று இருந்த பெண் ஒருவர் தன்னி டம் இருந்த ஐந்து மாத பெண் குழந்தையை திவ்யாவிடம் கொடுத்துள்ளார். ரயில் நிலை யம் வந்தபின் திவ்யா இறங்குவதற்காக தாயை தேடிய போது பேருந்தில் அவரை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த திவ்யா இதுகுறித்து நடத்துனரிடம் தெரிவித்தார். பேருந்தை நிறுத்தி விட்டு குழந்தையின் தாயை பேருந்து  முழுவதும் தேடினர். ஆனால் அந்தப் பெண் இல்லாததால், அதிர்ச்சியடைந்த அவர், பந்தையசாலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த னர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் குழந் தையை மீட்டு, கோவை அரசு மருத்துவம னையில் உள்ள பச்சிளம் குழந்தை பராம ரிப்பு பிரிவில் ஒப்படைத்தனர். பின்னர், பேருந் தில் குழந்தையை விட்டுச்சென்ற பெண் குறித்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்,  குழந்தையின் தாய் பேருந்தில் இருந்தவர் தானா, அல்லது குழந்தையின் தாய் யார் என்பது குறித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா பொருத்தும் பணியில் வனத்துறை

உதகை,ஜன. 20- கூடலூர் அருகே சிறுத்தை நடமாட்டத்தை  கண்காணிக்க வனத்துறையினர் கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஸ்ரீம துரை ஊராட்சிக்கு உட்பட்ட கம்மாத்தி மற்றும்  கூடலூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட விமல கிரி உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்களாக 2  குட்டிகளுடன் சிறுத்தை ஒன்று நடமாடுவதை  அப்பகுதி பொதுமக்கள் பார்த்துள்ளனர். மேலும் கிராம எல்லைப் பகுதிகளில் உள்ள புதர்களில் இரவு நேரங்களில் சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்டு வந்துள்ளது. இதுகு றித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக் கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் கேமரா பொருத்தி சிறுத் தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள் ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறு கையில், சிறுத்தை தனது குட்டிகளை பாது காப்பான இடத்திற்கு கொண்டு செல்வதற்கு  முயற்சி செய்து வரலாம். எனவே, பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

‘செர்ரி’ மலர்களை ரசித்த சுற்றுலாப் பயணிகள்

உதகை, ஜன.20- கோத்தகிரி சாலையில் பல்வேறு பகுதிக ளிலும் பூத்துள்ள செர்ரி மலர்களை சுற்றுலா  பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.  நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்க ளில் காணப்படும் மரங்கள் மற்றும் மலர் செடி கள் அதிகளவு காணப்படுகிறது. இந்நிலை யில் அக்டோபர் மாதங்களில் ‘செர்ரி’ மலர் கள் பூக்கும். தொடர்ந்து பனிக்காலம் முடியும்  வரை (4 மாதம்) ‘செர்ரி’ மலர்களை காண  முடியும். இந்த ‘செர்ரி’ மலர்கள் மாவட்டத் தில் பல்வேறு பகுதிகளிலும் பூத்து குலுங்கு கிறது. தற்போது உதகை- கோத்தகிரி சாலை,  தேவர்சோலை போன்ற பகுதிகளில் ‘செர்ரி’  மலர்கள் பூத்துள்ளன. இந்த அரிய வகை மலர்களை சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள் ளூர் பொதுமக்கள் கண்டு ரசித்து புகைப்ப டம் எடுத்துச் செல்கின்றனர்.