districts

img

ரயில் விபத்தில் பலியான மக்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

திருப்பூர், ஜூன் 5- ஒடிஷாவில் மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் பலி யான மக்களுக்கு சிஐடியு, வாலிபர் சங்கம், மாதர் சங்கம்,  மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் ஞாயிறன்று  மாலை அனுப்பர்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. சிஐடியு பாத்திரத் தொழிலாளர் சங்கச் செயலாளர் கே. குப்புசாமி தலைமையில் நடந்த இந்நிகழ்வில், மாவட்டச் செய லாளர் கே.ரங்கராஜ், மூத்த தலைவர் வி.பி. சுப்பிரமணியம், வாலிபர் சங்க நகரத் தலைவர் பி. ரகுபதி, செயலாளர் எஸ்.  வசந்த், மாதர் சங்கத் தலைவர் வி.அழகு, செயலாளர் ர. கவிதா, மாணவர் சங்க நிர்வாகி கதிரவன் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.