districts

img

பழங்குடியினர் வாழ்வாதார ஒருங்கிணைப்பு கூட்டம்

ஈரோடு, ஆக. 7- ஆசனூர் வனக்கோட்டத்தில் பழங் குடியினர் வாழ்வாதார மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள பல்துறை  ஒருங்கிணைப்பு கூட்டம் சத்தியமங்க லத்தில் புதனன்று நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனக்கோட் டத்தில் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டம் செயல் பாட்டில் உள்ளது. இதில், 21 சூழல்  மேம்பாட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு  செயல்பட்டு வருகின்றன. இத்திட்டத் தின் கீழ் குழு உறுப்பினர்களுக்கு திறன்  வளர்ப்பு பயிற்சிகள், சமுதாய வாழ்வா தார மேம்பாட்டு பணிகள், தனிநபர் தொழில் தொடங்குவதற்கான இயந்தி ரங்கள் வழங்குதல், சிறு தொழில் தொடங்க தனிநபர் மற்றும் குழுக்க ளுக்கான நிதியுதவி போன்ற பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக ஆசனூர் வனக்கோட்ட அலுவலகத்தில் பழங்கு டியினர் வாழ்வாதாரம் மேம்பாட்டு பணி களை மேற்கொள்ள பல்துறை ஒருங் கிணைப்பு கூட்டம் ஆசனூர் வனக் கோட்டம் துணை இயக்குநர் கு.சுதாகர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தனிநபராகவும் குழுக்களாகவும் தொழில் தொடங்குவ தற்கான விருப்பங்களை குழு உறுப்பி னர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். அவற்றில் பழங்குடியின ருக்கு நிலம் வாங்கித் தருதல், தேநீர் கடை மற்றும் உணவகம் அமைத்தல், அழகு கலை நிலையங்கள், தேனீ பெட்டி வழங்குதல், கறவை மாடு  கடன், தையல் இயந்திரம், ஷேர் ஆட்டோ, மாவு அரைக்கும் இயந்தி ரம், பேன்ஸி ஸ்டோர், ஆவின் பால கம், சமுதாயக் கூடம், கல்யாண சமை யல் பாத்திரங்கள் மற்றும் சாமியானா  பந்தல், பேண்டு வாத்திய இசைக்கருவி கள், குட்டை மீன் வளர்ப்பு, பாக்கு மட்டை தயாரிப்பு, சூரிய மின் மோட்டார்  ஆழ்துளை கிணறு, கட்டட கட்டுமானப்  பொருட்கள், இலகு ரக சரக்கு வாக னங்கள், மளிகை கடை, அவசர தேவை களுக்கு குறைந்த வட்டி கடன், சுய உத விக் குழுக்களுக்கான கடன், சமையல் எரிவாயு இணைப்பு, ஓட்டுநர் உரிமம்,  தேனீ வளர்ப்பு பயிற்சி, தையற்கலை  பயிற்சி, ஊறுகாய் தயாரிக்கும் பயிற்சி, அழகுகலைப் பயிற்சி ஆகி யவை அடங்கும். இக்கோரிக்கைகள் அனைத்தும் திட்டம் வாரியாக தொகுக் கப்பட்டு பட்டியல் தயாரித்து அத்துறை களிடம் ஒப்படைக்கப்பட்டன. இக்கூட்டத்தில் ஆசனூர் சூழல் மேம் பாட்டு சரகம் வனச்சரக அலுவலர் க. வெங்கடாசலம், வாழ்ந்து காட்டுவோம்  திட்டம் மாவட்ட செயல் அலுவலர் ஏ. சதிஷ், தாட்கோ மாவட்ட மேலாளர் அர் ஜுன், மாவட்ட தொழில் மையம் பொது  மேலாளர் திருமுருகன், ஒன்றிய பழங் குடியினர் அமைச்சகம்-இந்திய பழங் குடியினர் கூட்டுறவு சந்தை மேம்பாட்டு கூட்டமைப்பு பொது மேலாளர் (ஓய்வு)  வெ.இராமநாதன், சுடர் அமைப்பு நிறுவ னர் நடராஜ், ஆசனூர் சூழல் மேம்பாட்டு  சரகம் வனவர் சிவக்குமார் மற்றும் வனத் துறை களப்பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் 21 சூழல் மேம்பாட்டு குழுக்களிலிருந்து நூற்றுக் கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.