districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

விருது பெற திருநங்கைகளுக்கு அழைப்பு

சேலம், பிப்.9- சமூகத்தில் முன்னேற்றம் அடைந்த திருநங்கையர் களுக்கு “முன் மாதிரி” விருது வழங்கப்பட உள்ளதாக சேலம்  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம்  விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இச் சமூகத்தில் திருநங்கையர் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி,  தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து தனித்திறமை களைக் கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ளனர்.  அவ்வாறு சாதனை படைத்த திருநங்கையரை கௌரவிக்கும் வகையில், திருநங்கையர் தினமான ஏப்ரல் 15 ஆம் தேதி யன்று “திருநங்கையருக்கான முன்மாதிரி விருது” வழங்கப் பட உள்ளது. இவ்விருது பெறுவோருக்கு ரூ.1 லட்சத்துக் கான காசோலை மற்றும் சான்று வழங்கப்படுகிறது. திரு நங்கையருக்கான முன்மாதிரி விருதிற்கு கருத்துருக்களை அனுப்புவதற்கு மாற்று பாலினர்கள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 மாற்று பாலினருக்காவது அவர்கள்  வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். மாற்று  பாலினர் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கக்கூடாது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் உரிய விவரங்களுடன் சேவை ஆற்றியதற்கான விரிவான அறிக்கை, சமூக நல  சேவையாளரின், சமூக சேவை நிறுவனத்தின் சேவை  மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம், சமூகப் பணி யாளர் இருப்பிடத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்தி லிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்று மற்றும் கையேடு தமிழில் அச்சு செய்யப் பட்டு தலா 2 நகல் ஆகியவை கருத்துருக்களில் இணைக்கப் பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது கருத்துருக் களை பிப்.28 ஆம் தேதிக்குள் தமிழக அரசின் விருதுகள்  இணையதளமான https://awards.tn.gov.in-ல் பதி வேற்றம் செய்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், முதல் தளம், அறை எண்.126-ல் உள்ள மாவட்ட சமூக நல  அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் கூறப் பட்டுள்ளது. 

சுற்றுச்சூழலை பாதுகாப்போம்

சிஐடியு சார்பில் மினி மாரத்தான் போட்டி

கோவை, பிப்.9- பொதுப் போக்குவரத்தை பாதுகாக்க, சுற்றுச்சூழலை மேம்படுத்த, விபத்துகளை குறைக்க வலியுறுத்தி சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் மினி  மாரத்தான் போட்டி பிப்.12 தேதியன்று கோவையில் நடைபெறுகிறது.  தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் கள் சங்கம், அரசு விரைவு போக்குவரத்து  ஊழியர்கள் சங்கம் மற்றும் இந்திய தொழிற் சங்க மையம் இணைந்து பிப்.12ஆம்  தேதியன்று காலை 6 மணியளவில்  விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடை பெற உள்ளது.  இந்த மினி மாரத்தான் போட்டியை கோவை மாநகர காவல் ஆணையாளர் வி. பாலகிருஷ்ணன் துவக்கி வைக்கிறார். இப்போட்டி கோவை வ.உ.சி.  மைதானத்தில் துவங்கி எல்.ஐ.சி.சிக்னல்  வழியாக ஓசூர் சாலை, கே.ஜீ. திரைய ரங்கம், திருச்சி சாலை, சுங்கம், சர்க்யூட் ஹவுஸ், லட்சுமி மில்ஸ், அண்ணாசிலை வழியாக வந்து மீண்டும் வ.உ.சி பூங்கா  மைதானத்தில் நிறைவடைகிறது. இதில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு  ரொக்கப்பரிசும், பங்கேற்பாளர்களுக்கு  சான்றிதழ்களும் வழங்கப்படும் என  சிஐடியு  கோவை மாவட்ட அரசு போக்குவரத்து  ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர்  எம்.பரமசிவம் தெரிவித்தார். மேலும் சிறப்பு விருந்தினராக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன்,  கோவை மாநகராட்சி மேயர் கல்பனா  ஆனந்தகுமார், சுற்றுச்சூழல் பொறியாளர் டாக்டர் கே.ரவிசங்கர் ஆகியோர் பங்கேற்க வுள்ளனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன்,  சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட தலைவர் கே.மனோகரன் ஆகியோர் போட்டியில் வெற்றி பெறுபவர் களுக்கு சான்றிதழ்கள் வழங்கவுள்ளனர்.  அரசு விரைவு போக்குவரத்து ஊழியர்கள்  சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எம்.கனகராஜ்,  இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் மாவட்ட பொருளாளர் தினேஷ் ராஜா,   அரசு  போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தின்  எம்.அருணகிரிநாதன் ஆகியோர் போட்டி களை ஒருங்கிணைக்கின்றனர்.

அணைகளின் நிலவரம்

 திருமூர்த்தி அணை  நீர்மட்டம்:44.70/60அடி  நீர்வரத்து:816கன அடி வெளியேற்றம்:1115கன அடி அமராவதி அணை  நீர்மட்டம்:70.41/90அடி. நீர்வரத்து:169கனஅடி வெளியேற்றம்:758கன அடி

ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை

தருமபுரி, பிப். 9- பாலக்கோடு அருகே உள்ள கிராமத் திற்குள் புகுந்த ஒன்றை காட்டுயானையை விரட்டு முயற்சியில் வனத்துறையினர் ஈடு பட்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பென்னாகரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு காட்டு யானைகள் விளைப்பயிர்களை சேதப் படுத்தி விவசாயிகள் பொதுமக்களை அச் சுறுத்தி வந்தது. ஜோடியாக சுற்றி திரிந்த  இரண்டு காட்டு யானைகளில் ‘மக்னா’ எனப்படும் யானையினை மயக்க ஊசி செலுத்தி, கும்கி யானை உதவியுடன் இரண்டு  தினங்களுக்கு முன்னர் பிடித்த வனத்துறை யினர், யானைகள் காப்பகத்தில் விட்டு விட்டனர். இந்நிலையில், தனது ஜோடியை பிரிந்த ஒற்றை ஆண் யானையானது, தற் போது அப்பகுதிகளில் சுற்றி திரிந்து வரு கிறது. குறிப்பாக, சவுளூர் முத்துகிருஷ்ணன்  கொட்டாய் ஊருக்குள் நுழைந்தது. மேலும்,  விவசாய பயிர்களை சேதப்படுத்தியது.  இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள் ளனர். இதையடுத்து ஒற்றை காட்டு யானை யினை கண்காணித்து, வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் பணிகளில் தருமபுரி வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

1,783 மாணவிகளுக்கு உதவித்தொகை  மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

1,783 மாணவிகளுக்கு உதவித்தொகை  மாவட்ட ஆட்சியர் வழங்கினார் திருப்பூர், பிப்.9- திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட புதுமைப்பெண்  திட்டம் புதனன்று துவங்கப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர்  1783 மாணவிகளுக்கு வங்கி ஏடிஎம் அட்டைகளை வழங்கி னார். தமிழக அரசின் சார்பில் உயர்கல்வி பயிலும் மாணவிக ளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்  திட்டத்தின் கீழ் புதுமைப்பெண் என்ற பெயரில் மாணவிகள்  கல்வி பயின்று முடிக்கும் வரையிலும் மாதம் ஆயிரம் ரூபாய்  வங்கிக் கணக்கில் செலுத்தும் வகையில் திட்டம் தொடங்கப் பட்டு, அதற்கான ஏடிஎம் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. ஏற் கனவே திருப்பூர் மாவட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டில் 40  கல்லூரிகளில் இருந்து 3657 மாணவிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் ஏடிஎம் அட்டைகள் வழங்கப்பட்டு வங்கிக் கணக்கில் வரவு  வைக்கப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில், இன்று இரண்டா வது கட்டமாக 49 கல்லூரிகளில் இருந்து 1,783 மாணவிகளுக்கு  இத்திட்டத்தின் கீழ் ஏடிஎம் அட்டைகள் வழங்கப்பட்டது. இத் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் வினீத் , துணை மேயர் பாலசுப் பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவிகளுக் கான ஏடிஎம் அட்டைகளை வழங்கினர்.  இதையடுத்து, மாவட்ட ஆட்சியரிடம் முதலாம் ஆண்டு  அரசு கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் இத்திட்டத்தின் கீழ்  துவங்கப்பட்ட வங்கி கணக்கில் ஆதார் எண் இணைப்பதில் இடையூறு ஏற்படுவதாக புகார் அளித்தார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தனது கைபேசியிலேயே அதனை சரிபார்த்து நான்கு நாட்களுக்குள் அவை பரிசீலிக் கப்படும் எனவும், இல்லையென்றால் உரிய வங்கி அதிகாரி களை தொடர்பு கொண்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி  செய்து கொள்ள கேட்டுக்கொண்டார்.

ஏற்றுமதி நிறுவனங்களுக்கு உதவும் திட்டங்களை நீட்டிக்க கோரிக்கை

திருப்பூர், பிப்.9- ஏற்றுமதியாளர்களுக்கு வங்கிகள் வழங்கக்கூடிய நிதி உதவி சார்ந்த திட் டங்களை கால நீட்டிப்பு செய்ய வேண் டும் என்று இந்திய ரிசர்வ் வங்கிக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் எனப் படும், வங்கிகளுக்கு அளிக்கக்கூடிய வட்டி விகிதத்தை 0.25 புள்ளிகள் உயர்த்தி அறிவித்திருக்கிறது. இதைய டுத்து  திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்  தலைவர் கே.எம்.சுப்பிரமணியம் புதன் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பணவீக்கம் நிலை யில்லாமல் இருக்கும் நிலையில் வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு  விலைவாசியை கட்டுக்குள் வைப்ப தற்காக ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை 6.25 லிருந்து 6.50 ஆக  உயர்த்தி, உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அறிவித்து உள்ளது.  ரிசர்வ் வங்கி வட்டி விகித புள்ளியை  அதிகரிப்பதால் வங்கிகளில் வழங்கப் படும் கடனுக்கான வட்டி விகிதமும் அதி கரிக்கும், அது நேரடியாக திருப்பூர்  ஏற்றுமதி நிறுவனங்களின் பொருளா தார செயல்பாட்டையும் பாதிக்கும். ஏற் றுமதி நிறுவனங்கள் ஏற்கனவே வெளி நாடுகளில் ஆர்டர் குறைவாக இருப்ப தால் பாதிப்பை சந்தித்து வருகின்றன.  டாலர் கணக்கு அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 2022 முதல் திருப்பூர் ஏற் றுமதி நிறுவனங்கள் ஏற்றுமதியில் சரிவை சந்தித்து வருகின்றன வரக்கூ டிய மாதங்களில் மீண்டெழும் என்று நம் பிக் கொண்டிருந்தோம். எனவே தற் போது வட்டி விகித உயர்வில் இருந்து ஏற்றுமதி நிறுவனங்களை தற்காத்துக் கொள்வதற்காக வங்கிகள் ஏற்றுமதி மறு நிதி திட்டங்களில் கால நீடிப்பு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் ஏற்றுமதியாளர்களுக்கு இந்திய ரூபாயில் ஏற்றுமதி கடன் வழங்குவதற்கு வங்கிகளை ஊக்கு விக்க வேண்டும். இதன் மூலம்  ஏற்றுமதி யாளர்களுக்கு ஏற்படக்கூடிய வட்டிச் சுமை பாதிப்பு குறையும் என்று கே.எம். சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்ட சிறையில் சிறைத்துறை டிஜிபி ஆய்வு

திருப்பூர், பிப். 9 - திருப்பூர் மாவட்ட சிறையில் சிறைத் துறை தலைமை இயக்குனர் அம்ரிஷ் பூஜாரி வியாழன் அன்று திடீர் ஆய்வு  மேற்கொண்டார். போதைப் பொருள், செல்போன் போன்ற பொருட்கள் ஏதே னும் உள்ளதா என்று ஆய்வு மேற் கொண்டார். கைதிகளிடம் உணவு தரம்  குறித்தும் கேட்டறிந்தார். திருப்பூர் மாவட்ட சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 127 பேர். இந்த ஆய்வின்  போது கோவை மண்டல சிறைத்துறை  துணைத் தலைவர் சண்முகசுந்தரம், கோவை மத்திய சிறை கண்காணிப் பாளர் ஊர்மிளா ஆகியோர் உடன் இருந் தனர்.

கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

திருப்பூர், பிப்.9- கொத்தடிமை முறையை ஒழிக்க திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அலகு இரண்டு  மற்றும் விழுதுகள் அமைப்பின் சார்பில் உறுதிமொழி ஏற்கப் பட்டது. பேராசிரியர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார்,  சிறப்பு விருந்தினராக மாவட்ட தொழிலாளர் நல ஆணையர்  (அமலாக்கம்) மலர்க்கொடி கலந்து கொண்டார். 

உடுமலை அணைகளின் நிலவரம்

அமராவதி அணை நீர்மட்டம்:70.41/90அடி.நீர்வரத்து:169கனஅடி
வெளியேற்றம்:758கனஅடி

திருமூர்த்தி அணை நீர்மட்டம்:44.70/60அடி நீர்வரத்து:816கன அடி
வெளியேற்றம்:1115கனஅடி

1,783 மாணவிகளுக்கு உதவித்தொகை  மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

திருப்பூர், பிப்.9- திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட புதுமைப்பெண்  திட்டம் புதனன்று துவங்கப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர்  1783 மாணவிகளுக்கு வங்கி ஏடிஎம் அட்டைகளை வழங்கி னார். தமிழக அரசின் சார்பில் உயர்கல்வி பயிலும் மாணவிக ளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்  திட்டத்தின் கீழ் புதுமைப்பெண் என்ற பெயரில் மாணவிகள்  கல்வி பயின்று முடிக்கும் வரையிலும் மாதம் ஆயிரம் ரூபாய்  வங்கிக் கணக்கில் செலுத்தும் வகையில் திட்டம் தொடங்கப் பட்டு, அதற்கான ஏடிஎம் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. ஏற் கனவே திருப்பூர் மாவட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டில் 40  கல்லூரிகளில் இருந்து 3657 மாணவிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் ஏடிஎம் அட்டைகள் வழங்கப்பட்டு வங்கிக் கணக்கில் வரவு  வைக்கப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில், இன்று இரண்டா வது கட்டமாக 49 கல்லூரிகளில் இருந்து 1,783 மாணவிகளுக்கு  இத்திட்டத்தின் கீழ் ஏடிஎம் அட்டைகள் வழங்கப்பட்டது. இத் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் வினீத் , துணை மேயர் பாலசுப் பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவிகளுக் கான ஏடிஎம் அட்டைகளை வழங்கினர்.  இதையடுத்து, மாவட்ட ஆட்சியரிடம் முதலாம் ஆண்டு  அரசு கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் இத்திட்டத்தின் கீழ்  துவங்கப்பட்ட வங்கி கணக்கில் ஆதார் எண் இணைப்பதில் இடையூறு ஏற்படுவதாக புகார் அளித்தார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தனது கைபேசியிலேயே அதனை சரிபார்த்து நான்கு நாட்களுக்குள் அவை பரிசீலிக் கப்படும் எனவும், இல்லையென்றால் உரிய வங்கி அதிகாரி களை தொடர்பு கொண்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி  செய்து கொள்ள கேட்டுக்கொண்டார்.

மின்தடை

ஈரோடு, பிப்.9- பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில்  மாதாந்திர பராமரிப்பு பணி  வரும் வெள்ளியன்று  (இன்று) நடைபெற உள்ளது. இத னால் சிப்காட், பெருந்துறை நகர், பெருந்துறை வடக்கு, சின்னவேட்டுபாளையம், பெரியவேட்டுபாளையம், ராஜவீதி, கோட்டைமேடு, பெருந்துறை மேற்கு, லட் சுமிநகர், கருக்கங்காட்டூர், கள்ளியம்புதூர், துடுப்பதி, தாளக்கரைபுதூர், பள்ளக் காட்டூர், டி.கே.புதூர், சிலேட் டர்புரம், சுள்ளிபாளையம் பிரிவு, அய்யப்பா நகர், அண் ணாநகர், சக்திநகர், கூட்டுறவு நகர், குன்னத்தூர் நால்ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9  மணி முதல் மாலை 5 மணி  வரை மின் விநியோகம் இருக் காது.

கஞ்சா சாக்லேட் பறிமுதல்: ஒருவர் கைது

சூலூர், பிப்.9- கோவை மாவட்டத்தில் குட்கா மற்றும் போதை பொருட் கள் கஞ்சா பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கஞ்சா சாக்லேட்டுகளின் புழக்கம் அதிகரித்து வருவதால், மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை போலீ சார் தீவிர குட்கா, கஞ்சா சோதனையில் ஈடுபட்டு வருகின்ற னர். இந்நிலையில், சூலூரில் குட்கா வைத்திருப்பதாக ராஜஸ் தான் மாநிலத்தைச் சேர்ந்த பீடா வியாபாரியிடம் போலீசார் சோதனை நடத்தி உள்ளனர் அதில், குட்காவுக்கு பதிலாக கஞ்சா சாக்லேட்டுகள் போலீசாருக்கு சோதனையில் கிடைத் துள்ளது. இதனையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த  அசோக்குமார் பிரஜபதியை சூலூர் காவல் நிலையம் அழைத்து சென்றனர். மேலும், அவர் வைத்திருந்த ஒன்றரை கிலோவிற் கும் அதிகமான கஞ்சா சாக்லேடுகளை பறிமுதல் செய்தனர். இதன்பின் அவரை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி, போலீசார் சிறையில் அடைத்தனர்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி

தருமபுரி, பிப்.9- பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தி, விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்க்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகி றது. அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தருமபுரி மண்டலம் சார்பில், தருமபுரி பேருந்து நிலை யத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து கண்காட்சி  வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி, பொது  மேலாளர்கள் சு.ஜீவரத்தினம், சி.ரவிலட்சுமணன், கூடுதல் காவல் கண்காணிப்பளார் இளங்கோவன், துணை போக்கு வரத்து ஆணையர் கே.எம்.பிரபாகரன், வட்டாரப் போக்கு வரத்து அலுவலர் த.தாமோதரன் உள்ளிட்ட அரசு அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.