கோவை, பிப்.27-
ஆளும் கட்சியின் நிர்பந்தம் கார ணமாக வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க நிர்வாகிகளை இரவோடு இரவாக இடமாற்றம் செய்ததை கண்டித்து கோவையில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆவேச ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை துவக்க வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளியன்று கோவை சுங்கம் பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது அதிமுக தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை அவமரியாதையாக பேசியதால் இருதரப்பிற்கும் வாக்குவாதம் ஏற் பட்டது. பின்னர் தொழிற்சங்க மூத்த தலைவர்கள் அனைவரையும் சமா தானப்படுத்தி அனுப்பி வைத்தனர்
இந்நிலையில், ஆளும் கட்சி யின் நிர்பந்தத்தால் சிஐடியு, எல்பி எப் தொழிற்சங்க நிர்வாகிகளை பழி வாங்கும் நோக்கத்தோடு போக்கு வரத்து நிர்வாகம் இரவோடு இர வாக இடமாறுதல் செய்து உத்தரவு வழங்கியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பின் னும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக போக்குவரத்து நிர்வாகம் ஜால்ரா அடிப்பதாக குற்றம்சாட்டி தொழிற் சங்க கூட்டு கமிட்டி சார்பில் சுங்கம் பணிமனை முன்பு கண்டன ஆர்ப் ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு பொதுச்செயலாளர் வேளாங்கண்ணி ராஜ் உட்பட ஐநூ றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று முழக்கங்களை எழுப்பி னர்.