ஈரோடு, மே 29- கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. பவா னிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப் பணை வழியாக செல்லும். இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வார்கள். ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி நாமக்கல், சேலம், கோவை, திருப்பூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் இங்கு ஏராளமானோர் வருவதுண்டு. இந் நிலையில், பவானிசாகர் அணையில் இருந்து கொடிவேரி அணைக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் நிறுத்தப் பட்டுள்ளதால், தடுப்பணைக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளது. மேலும், விடுமுறை நாளான ஞாயி றன்று கொடிவேடி தடுப்பணைக்கு வந்த பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அணை பகுதியில் தண்ணீர் கொட்டாததாலும், அணை மூடப்பட்டு இருந்ததாலும் ஏமாற்றத் துடன் திரும்பிச் சென்றனர்.