districts

img

கோடை விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி வருகை

நாகர்கோவில், ஏப். 16- தமிழ் புத்தாண்டை முன்னிட்டும் வெள்ளி,  சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3  நாட்கள் தொடர் விடுமுறையையொட்டியும் கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான  சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதி காலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து  இருந்தனர். விவேகானந்தர் நினைவு மண்டபம்  மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணி கள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காந்தி நினைவு மண்டபம்,  காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினை வுப் பூங்கா, விவேகானந்தபுரத்தில் உள்ள  ராமாயண தரிசன சித்திரக் கண்காட்சி கூடம், அரசு பழத்தோட்டம், வட்டக்கோட்டை பீச் உள்பட  அனைத்து சுற்றுலா தலங்களிலும் காலையில்  இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.