உதகை, ஏப்.25- ஊட்டியில் கோடை சீசன் துவங்கிய நிலையில் சுற் றுலா பயணிகளில் வருகை அதிகரித்துள்ளது. ரம்ஜான் மற்றும் வார விடுமுறை யையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலா பகுதி களில் சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. ஊட்டி நகருக்கு 5 ஆயிரத் திற்கு மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் வந்ததால், சேரிங் கிராஸ், குன்னூர் சந்திப்பு, பிங்கர் போஸ்ட் சாலை, தொட்டபெட்டா, படகு இல்ல சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றது. நெரிசலை சீர்படுத்த போலீசார் திணறினர். போக்குவரத்து நெரிசலில் நீண்ட நேரம் வாகனம் நின்றதால் வேண்டியதிருந் ததால் சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக் குள்ளாகினர்.