உதகை, ஜூலை 1- பக்ரீத் மற்றும் வார இறுதி விடுமுறையை கொண்டாட உதகையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மலைகளின் அரசி என அழைக்கப்படுவது நீலகிரி மாவட்டம். மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். இங்கு அமைந் துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க கேரளா, கர்நா டகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழ கத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருகை புரிந்து இங்கு இயற்கை யில் அழகை கண்டு ரசிப்பது வழக்கம். இந்நிலையில், பக்ரீத் பண்டிகை மற்றும் வார இறுதி விடு முறையை ஒட்டி உதகையில் உள்ள சுற்றுலா தலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும், பூங்காவிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் பூங்கா வில் அமைந்துள்ள இந்திய வரைபடம் மற்றும் செல்ஃபி ஸ்பாட்டுகளில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இந்தாண்டு, கோடை காலத்தில் உதகை ரோஜா பூங்கா வில் ரோஜாக்கள் முழுவதுமாக மலராத நிலையில், தற் போது செடிகளில் ரோஜா மலர்கள் கொத்துக்கொத்தாக பூத்து பார்வையாளர்களை பரவப்படுத்துகின்றன. மேலும், இந்த பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்கு பூத்துக்குலுங்கும் பல்லாயிரக்கணக்கான பல வண்ண ரோஜாக்களை கண்டு ரசித்தும், புகைப்படம் எடுத்தும் சென்றனர். இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறும் போது, ‘சமவெளி பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், உதகையில் சாரல் மலையுடன் நிலவும் குளு குளு காலநிலையை அனுபவிக்கிறோம்’ என்றனர்.