உதகை, அக்.30- நீலகிரியில் 2 ஆவது சீசன் முடிவ டைய இருப்பதால் சுற்றுலா பய ணிகள் கூட்டம் அதிகரித்து உள் ளது. உதகை தாவரவியல் பூங்கா வில் கடந்த 2 நாட்களில் 22 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந் துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் இயற்கை எழிலுக்கு பஞ்சம் இல்லை. மேலும், சுற்றுலா தலங்கள் அதிகளவில் உள்ளன. இங்கு வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த வர்கள் மட்டுமின்றி வெளி நாடு களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதன்படி முதல் சீசனான ஏப்ரல், மே மாதங் களில் சுமார் 8 லட்சம் பேர் வந்து சென்றனர். இதேபோல் 2 ஆவது சீசன் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி அக்டோபர் வரை நடக் கும். இதன்படி 2 ஆவது சீசன் தொடங்கியது முதல் தீபாவளி விடு முறை, ஆயுத பூஜை விடுமுறைக ளுக்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இந்நிலை யில் 2 ஆவது சீசன் முடிவடைய இருப்பதால் வார விடுமுறை நாட்க ளான கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட் டது. குறிப்பாக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் வருகை தந்தனர். உதகை தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கிய மலர் களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
இதன்பின் பெரணி இல் லம், கண்ணாடி மாளிகைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த பெரணி செடிகள், கள்ளி செடிகளை பார்வையிட்டனர். பல்வேறு இடங் களில் குடும்பத்தினருடன் புகைப் படம் எடுத்து மகிழ்ந்தனர். படகு சவாரி இதுதவிர உதகை ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டியதால், நீண்ட வரி சையில் காத்திருந்து பயணச்சீட்டு பெற்றனர். இதன்பின் மிதி படகு, துடுப்பு படகுகளில் பயணம் செய்து மகிழ்ந்தனர். கடந்த 2 நாட்களாக உதகை படகு இல்லத்துக்கு 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து உள்ளனர். அதாவது, ஞாயிறன்ற சுமார் 10 ஆயிரம் பேரும், சனி யன்று 9 ஆயிரத்து 476 பேரும் வந் துள்ளனர். இதேபோன்று தாவர வியல் பூங்காவில் சனியன்று 9 ஆயி ரத்து 220 பேரும், ஞாயிறன்று சுமார் 12 ஆயிரம் பேரும் என சுமார் 22 ஆயி ரம் சுற்றுலா பயணிகள் வந்து, மலர் களை கண்டு ரசித்து உள்ளனர். மேலும் 2 வாரம் நீடிப்பு இதுமட்டுமின்றி உதகை ரோஜா பூங்கா, படகு இல்லம், தேயிலை பூங்கா, சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில், உதகை அரசு தாவ ரவியல் பூங்காவில் உள்ள மலர் அலங்காரங்களை, மேலும் 2 வாரங் கள் சுற்றுலா பயணிகள் பார் வைக்கு வைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் சுற் றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.