districts

img

கோவை குற்றாலம் திறப்பு: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கோவை, செப்.27- வெள்ளப்பெருக்கு கார ணமாக கடந்த 2 மாதங்களாக மூடப்பட்ட கோவை குற்றா லம் அருவியில் குளிக்க வனத் துறையினர் செவ்வாயன்று அனுமதி வழங்கினர். கோவை மாவட்டத்தில் முக்கிய சுற்றலா தளங்களில் கோவை குற்றால அருவி ஒன் றாகும். இங்கு உள்ளூர், வெளி யூர் மக்கள் மற்றும் வெளி நாட்டு சுற்றலா பயணிகள் அதி களவில் வருகை தருகின்றனர். அருவியில் குளித்து மகிழ்ந்தும், தொங்கு பாலத்தில் நடந்து சென்றும் இயற்கையை ரசித்து சுற் றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின் றனர். இந்நிலையில், கோவை குற்றாலத்தில் அவ்வபோது வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். இதனை வனத்துறையினர் கண் காணித்து நீரின் வரத்து அதிகரித்தால் சுற் றுலா பயணிகளுக்கு தடைவிதித்து வருகின்ற னர். கடந்த சில மாதங்களாக கோவை குற்றா லத்தில் அவ்வப்போது பலத்த மழையும், சாரல் மழையும் பெய்து வந்தது. இதனால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற் றுலா பயனிகளுக்கு தடை விதிக்கப்பட்டு வந் தது. இந்நிலையில், தற்போது அருவியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. மேலும் காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை என தொடர் விடுமுறை வரவுள்ளது. இதனால் செவ்வா யன்று முதல் கோவை குற்றாலம் திறக்கப்படு வதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காலை 10 மணி முதல் 11  மணி வரையும், 11.30 மணி முதல் 12.30 மணி  வரையும், மதியம் 1 மணி முதல் 2 மணி வரை  என்ற கால அட்டவணையின் அடிப்படையில் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்பட உள்ள னர்.