districts

img

திமுக சார்பில் முப்பெரும் விழா

ஈரோடு, ஜூன் 2- கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழாவில், கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டா லின், மாநிலம் முழுவதும் திமுகவினர் நீர், மோர் பந்தல் அமைக்க உத்தரவிட்டார். அதனடிப்படையில் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ல.கள்ளிப்பட்டி பிரிவில் திமுக விவசாய அணி சார்பில் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு நீர், மோர், வெள்ளரி, நுங்கு, தர்பூசணி துண்டுகள் வழங்கப்பட் டன. தற்போது கத்திரி வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால் நீர், மோர் பந்தல் நிறைவு விழா மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு, 101 ஆவது பிறந்தநாள் விழா என முப்பெரும் விழா கொண்டாடப் பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாநில விவசாய அணி இணைச்செ யலாளர் மணி தலைமை வகித்தார். அப்போது, கடந்த ஒரு மாதமாக நீர், மோர் பந்தல் சேவையில் ஈடுபட்டு வந்தவர்க ளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மணி, தொமுச சரவணன், வார்டு செயலாளர் செந்தில்குமார், முன்னாள் மாவட்ட கலை இலக்கியப் பிரிவு துணை அமைப்பாளர் தென்றல் ரமேஷ், கவுன்சிலர் குமார், சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி மதிவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;