கோவை, ஆக.24- தமிழ்நாடு அரசிற்கும், தமிழக மக்களுக்கும் எதிராக செயல் பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற முற்போக்கு அமைப்பினரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா வியாழனன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற் காக ஆளுநர் ஆர்.என்.ரவி விமானம் மூலமாக கோவைக்கு வந்தார். இந்நிலையில், கோவை லாலி ரோடு சிக்னலில் அனைத்து முற்போக்கு அமைப்பினர் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டும் போராட் டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு தபெதிக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமை வகித்தார். இதில், ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் ரவிக்குமார், திரா விட தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி, இப்போராட்டத் தில், தமிழ்நாடு நலன் சார்ந்த திட்டங்களை சட்டமன்றத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றிய நிலையில், மசோதாக்களுக்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். மேலும், தமிழ்நாடு அரசு கல்வித்துறை அறிவித்திருக்கின்ற மாநில பொது பாடத்திட்டத்தை பல்கலைக்கழகங்கள் ஏற்க வேண்டி யது இல்லை என்றும் தான்தோன்றித்தனமாக அறிவித்துள்ள தைக் கண்டித்தும், தமிழ்நாடு மக்களின் உணர்வுகளுக்கு எதி ராக, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஆர். என்.ரவியை திரும்பி போக வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப் பட்டன. இப்போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதித் தமிழர் பேரவை, திராவிடர் தமிழர் பேரவை உள்ளிட்ட கட்சிக ளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறை யினர் கைது செய்தனர்.