districts

img

சாலை வசதி செய்து தரப்படாததால் பெண்ணை தொட்டில் கட்டி பிரசவத்திற்கு கொண்டு சென்றனர்

உடுமலை, ஏப்.8- உடுமலை அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் குளிப்பட்டி கிரா மத்தில், சாலை வசதி இல்லாத தால், பிரசவ வலியில் துடித்த பெண்ணை தொட்டிலில் கட்டி மருத் துவமனைக்கு அழைத்து சென்ற னர். உடுமலை தாலூகா மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் 18 மலை வாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்புக ளுக்கு செல்ல, மலை அடிவார பகு தியில் இருந்து காட்டுபகுதியின் வழி யாக இருக்கும் ஒற்றை அடி பாதை யில் தான் செல்ல வேண்டும். அது வும் நடந்து மட்டுமே செல்ல முடி யும். இப்பகுதி மக்கள் தங்களின்  அடுப்படை தேவைகளுக்காகவும், மருத்துவ சேவைக்காகவும், குழந் தைகள் தங்கள் படிப்புக்காகவும் இதுநாள் வரை நடந்தே சென்று வரு கின்றனர். இது மிகவும் சிரமத்தை  ஏற்படுத்துவதாக கூறி, மலைவாழ்  மக்கள் சென்று வர பாதை அமைக்க வேண்டும் என அப்பகுதி மலை வாழ் மக்கள் பல வருடமாக கோரிக்கை வைத்து வருகின்ற னர். கடந்த வருடம் உடுமலை வன  அலுவகத்தின் முன்பாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார் பில் தொடர் காத்திருப்பு போராட் டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் எதிரொ லியால், திருமூர்த்தி மலை பகுதி யான குருமலை பகுதிக்கு சாலை  அமைக்க மாவட்ட ஆட்சியர் தலை மையில், வனக்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, தளி பேரூராட்சி நிர்வாகத்தின் சார் பில் திருமூர்த்திமலை பகுதியில் இருந்து குருமலைக்கு சாலை  அமைக்க, சுமார் 44 லட்சம் ருபாய்க்கு டென்டர் விடப்பட்டு சாலை போடும் பணி துவங்கப் பட்டது. ஆனால், சாலை போட  சென்றவர்களை வனத்துறை தடுத்த காரணத்தால் சாலை அமைக் கும் வேலை தடைபட்டுள்ளது. இந்த நிலையில், குளிப்பட்டி கிராமத்தில் நாகம்மாள் என்ற பெண்ணின் பிரசவத்திற்கு, மக் கள் தொட்டில் கட்டி மருந்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவி வரும் நிலையில், சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.