சேலம், ஜூலை 10- பொறியியல் பட்டப்படிப்பிற்கான தரவரிசை பட்டியலில், அரசு இடஒதுக்கீடு பிரிவில் சேலத் தைச் சேர்ந்த தறித்தொழிலாளியின் மகள் முத லிடம் பிடித்தார். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம். விசைத்தறி கூலித்தொழிலாளியான இவரது மனைவி சிவரஞ்சனி. இத்தம்பதியின் மகள் ராவணி, அரசு மேல்நிலை மாதிரி பள்ளி யில் பயின்ற, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 586 மதிப்பெண் பெற்றார். இதைத்தொடர்ந்து அவர் பொறியியல் பட்டப்படிப்பிற்கு கலந்தாய்வில் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில், புதனன்று அதற்கான தரவரிசை பட்டியல் வெளி யான நிலையில், அரசு பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் 7.5 சதவிகித உள் இடஒதுக்கீட்டின் படி, ராவணி மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இதுகுறித்து மாணவி ராவணி கூறுகையில், நான் ஒரு விசைத்தறி கூலித்தொழிலாளியின் மகள். எனது பெற்றோர், உறவினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர், ஆசிரியயைகள் கொடுத்த ஊக் கத்தினால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, பொறியியல் படிப் பிற்கு விண்ணப்பத்திருந்தேன். தற்போது 7.5 சதவிகித உள் இடஒதுக்கீடு மூலம் தமிழக அள வில் முதலிடம் கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி யாக உள்ளது. ஒரு விஞ்ஞானியாக வேண்டும் என்பதே எனது கனவு. இந்த வாய்ப்புக்கு ஒத்து ழைப்பு கொடுத்த அனைவருக்கும் எனது நன் றியை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.