சேலம், டிச.26- பிளாஸ்டிக் இல்லாத ஏற்காட்டை உருவாக்கும் விதமாக, ஏற்காடு மலைப்பாதையில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற் றும் பணி மேற்கொள்ளப்பட்டது. சேலம் மாவட்டம், ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு தமிழ கம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், மலைகள் மற்றும் சாலையோரங்களில் சுற் றுலா பயணிகள் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட் கள் அதிகளவில் குவிந்துள்ளது. இதனை தூய்மைப் படுத்தும் முயற்சியாக பள்ளி மாணவர்கள் மற்றும் பசுமைத் தாயகம் அமைப்பினர் இணைந்து ஏற்காடு மலைப் பாதையில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றும் பணியில் ஞாயிறன்று ஈடுபட்டனர். இந்நிகழ்வில் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் கலந்து கொண்டு இளைஞர்களுடன் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த பணி செய்து பிளாஸ்டிக் இல்லாத ஏற்காட்டை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார்.