districts

நிலுவை ஊதியத்தை வழங்கும் வரை போராட்டம் தொடரும்

உதகை, ஆக.27- நிலுவை சம்பளத்தை வழங்கினால் மட்டுமே வேலைநிறுத்த போராட்டத்தை கைவிடுவோம் என கூடலூரில் நடை பெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தேயிலை தோட்டத்தொழிலாளர்கள் அறிவித்தனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் சில்வர் கிளவுட் பகுதியில் தனியார் எஸ்டேட் டில் நிரந்தர மற்றும் தற்காலிக தொழி லாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு 5 மாத நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் என  கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், நிர்வாகம் காலதாமதம் செய்து வருகி றது. இதனால் நிலுவை சம்பளம் மற்றும் பணபலன்களை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடந்த 3 மாதங்க ளாக தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். இதைத்தொடர்ந்து கூடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில், முத்த ரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. கோட்டாட்சியர் முகமது குதரதுல்லா தலைமையில் வட்டாட்சியர் ராஜேஸ் வரி, தொழிலாளர் நல உதவி ஆணையர் முருகேசன், கூடலூர் காவல் துணை  கண்காணிப்பாளர் (பொ) செந்தில் குமார், எஸ்டேட் நிர்வாக அலுவலர் கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில், நிலுவை சம்பளம் வழங்குவது தொடர்பாக எஸ்டேட் நிர் வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட வில்லை. இருப்பினும் பல கட்டமாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற் றது. அப்போது, நிலுவை சம்பளம் வழங் கினால் மட்டுமே வேலைநிறுத்த போராட் டத்தை கைவிடுவோம் என தொழிலாளர் கள் தெரிவித்தனர். இதையடுத்து அடுத்த கட்ட பேச்சு வார்த்தை செப்.4 ஆம் தேதியன்று குன் னூர் தொழிலாளர் நலத்துறை அலுவ லகத்தில் நடத்தப்படும் என அதிகாரிகள் அறிவித்தனர். இதனால் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதுகுறித்து தொழிலா ளர்கள் கூறுகையில், நிலுவை சம்பளம்  வழங்கினால் மட்டுமே வேலை நிறுத் தத்தை கைவிட முடியும். அதுவரை போராட்டம் தொடரும், என்றனர்.