தாராபுரம், பிப்.21- தாராபுரத்தில் விதிகளை மீறி செயல் பட்ட போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் என் பவர் திங்களன்று உயிரிழந்தார். இதை யடுத்து பெற்றோர் மற்றும் உறவி னர்கள் உரிமையாளரை கைது செய்ய கோரி தாராபுரம் - மதுரை நெடுஞ்சாலை யில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மது போதை மறுவாழ்வு மையம் சட்டவி ரோதமாக செயல்பட்டு வந்ததாக கூறப் படுகிறது. இந்நிலையில், போதை மறு வாழ்வு மையத்தில் 6 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த களிமேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவ ருக்கு திங்களன்று அங்கு கொடுக்கப் பட்ட மாத்திரையால் மாரடைப்பு ஏற்பட் டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மணிகண்டன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணம் அடைந்துள்ளார். வெற்றி லைஃப் கேர் பவுண்டேஷன் மது போதை நோய் மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் உரி மையாளர் கார்த்திகேயனை உடனடி யாக கைது செய்ய வலியுறுத்தியும், மேலும், இறந்த மணிகண்டனின் மனைவி, ஐந்து வயது மகன், மற்றும் 18 மாத குழந்தையின் வளர்ப்பு செலவிற்கு உரிய இழப்பீடு பெற்றுத்தரக்கோரி இறந்த மணிகண்டனின் உறவினர்கள் தாரா புரம் - மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலை மறி யலில் ஈடுபட்ட மணிகண்டனின் உறவி னர்களிடம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.