districts

img

திருநங்கையாக மாறிய மகனை ஆட்கள் வைத்து கொலை செய்த தாய்

சேலம், டிச.20- சேலத்தில் திருநங்கையாக மாறிய மகனை ஆட்கள் வைத்து கொலை செய்த தாய் உட்பட 5  பேரை காவல் துறையினர் கைது  செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாநகர், ஜாகிர் அம்மா பாளையம் பகுதியைச் சேர்ந்த வர் உமாதேவி (45). கணவரை பிரிந்து வசிக்கும் இவரது மகன் நவீன்குமார் (19). சமீபத்தில் நவீன் குமார் திருநங்கையாக மாறியதைத் தொடர்ந்து தனது பெயரை அக்சிதா  என மாற்றிக் கொண்டார்.இந்நிலை யில், அவரது வீட்டின் அருகே உள்ள ஒரு முட்புதரில் கடந்த வாரம் படுகா யங்களுடன் மீட்கப்பட்ட அக்சிதா  சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டார். இதில், சிகிச்சை பலனின்றி  கடந்த இரு தினங்களுக்கு முன்பு  அக்சிதா உயிரிழந்தார். இதுதொ டர்பாக சூரமங்கலம் காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சந்தேக மரணம் குறித்து  காவல் துறையினர் உமாதேவியி டம் தீவிர விசாரணை மேற்கொண் டனர். அதில், தனது மகன் திருநங் கையாக மாறியது பிடிக்காததால்  அவருக்கு ஹார்மோன் ஊசி  போட்டு ஆணாகவே மாற்ற ஏற பாட்டை செய்ய முயன்றுள்ளார். ஆனால், அதற்கு அக்சிதா ஒப்புக் கொள்ளாததால், தனக்கு தெரிந்த  நண்பர்களை கொண்டு அடித்து,  வலுக்கட்டடாயமாக மருத்துவம னைக்கு கொண்டு செல்ல முயன் றபோது, தாக்கியதில் அக்சிதா மூச்சுத்திணறி இறந்துவிட்டதாக கருதி, அவரை தூக்கி வீசப்பட் டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து உமா தேவியை கைது செய்த காவல்  துறையினர், அக்சிதா மீது தாக்கு தல் நடத்திய வெங்கடேஷ், காம ராஜ், கார்த்திகேயன், சந்தோஷ், சிவகுமார் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து  சிறையில் அடைத்தனர். இச்சம் பவம் அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.