கோவை, ஜன.2- கோவையைச் சேர்ந்த மழலைகள் இருவர், முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு, தங்களது சேமிப்பு நிதியை வழங்கிய சம்பவம் நெகிழ்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் உருவான மிக்ஜம் புய லால் சென்னை மற்றும் அதனை சுற்றி யுள்ள மாவட்டங்கள் கடுமையான பாதிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, ஏற்பட்ட வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட் டங்கள் கடுமையாக பாதிப்பட்டது. இதில் ஏராளமான மக்கள் தங்களது உடமைகளை இழந்து, தற்போது வரை தவித்து வருகின்றனர். இந்நி லையில், பாதிகப்பட்ட மாவட்டங்களை சரிசெய்யும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது. அதற்காக, பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஏராளமான தன்னார்வலர்கள் முதல மைச்சர் நிவாரணப் நிதிக்கு, தங்களால் முயன்ற நிதியை வழங்கி வருகின்ற னர். அந்த வகையில், கோவை மாவட் டத்தைச் சேர்ந்த மழலை சகோதரி கள் பிரணவிகா, கயல் கன்னி ஆகி யோர், உண்டியலில் சேர்த்து வைத்தி ருந்த 3054 ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்காக, கோவை மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாயன்று வழங்கி னர். மேலும், அவர்களது பெற்றோர் டி.பழனிசாமி, எம்.கிருத்திகா தங்க ளது மூன்றாவது குழந்தையின் பெயர் சூட்டு விழாவில் கிடைத்த மொய் பணம் 5500 ரூபாயையும் முதல மைச்சர் நிவாரண நிதிக்கு ஆட்சியரி டம் அளித்தனர். ஏற்கனவே மழலை பிரணவிகா தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 1615 ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.