districts

img

நான்கு மாதமாகியும் திறக்கப்படாத சுகாதார நிலையம்

கோவை, ஏப்.10- புதுப்பிக்கட்டு 4 மாதங்கள் கடந்த நிலையிலும், இதுவரை திறக்கப்படாத  சுகாதார நிலையத்தை உடனடியாக மக் கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர  வேண்டும் என்பதை வலியுறுத்தி புலிய குளத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் கையெ ழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகரட்சி, 66 ஆவது வார்டு, ஏழைஎளிய உழைப்பாளி மக்கள் குவியலாக வாழும் பகுதியாகும். பணம் கொடுத்து மருத்துவம் பார்க்கும் வசதி யற்ற இம்மக்களின் நிலை அறிந்து, ஆரம்ப சுகாதார நிலையம் பல ஆண்டு களுக்கு முன்னால் கட்டப்பட்டது. மருத் துவர், மருந்து பற்றாக்குறை என குறை பாடுகள் இருந்தபோதும், இங்குள்ள மக்கள் இதனையே பயன்படுத்தி வந்த னர். இந்நிலையில், புதிதாக பொறுப் பேற்ற திமுக அரசு, சுகாதரா நிலையங் களின் கட்டமைப்பை மேம்படுத்த உத் தரவிட்டது. இதனடிப்படையில், புலிய குளம் ரெட்பீல்டு சாலையில் உள்ள மாநகராட்சி சுகாதார நிலையமும், புதுப்பிக்கப்பட்டது. ஆனால், 4 மாதங் கள் கடந்த நிலையிலும் இதுவரை யில் திறக்கப்படவில்லை. இதனை உட னடியாக திறந்து மக்கள் பயன்பாட் டிற்கு கொண்டு வர வலியுறுத்தி, மார்க் சிஸ்ட் கட்சியினர் பொதுமக்களிடம் கையெழுத்து பெரும் இயக்கத்தில் ஈடு பட்டனர். இதுகுறித்து, மார்சிஸ்ட் கட்சியினர் கூறுகையில், கோவை மாநகராட்சி  ஆரம்ப சுகாதார மையம் சிறப்பான  முறையில் செயல்பட்டுக்கொண்டிருந் தது.

பிறகு மருத்துவமனையில் மருத்து வர், செவிலியர் இல்லாமல், காவலர் மருத்துவம் பார்க்கின்ற அளவிற்கு இருந்த மருத்துவமனை பின்பு மூடப் பட்டது. தற்போது கோவை மாநக ராட்சி நிதி ஓதுக்கி சிறப்பான முறையில்  கட்டி உள்ளது. ஆனல், மருத்துவமனை இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு திறக் காமல் உள்ளது. இதனால், இந்த பகுதி யில் இருக்கின்ற கர்ப்பணி பெண்கள் பத்து மாத காலங்களில் மருத்துவ பரி சோதனை செய்வதற்கும், ரத்தக்கொ திப்பு சர்க்கரை நோயினால் பாதிக்கப் பட்ட பெரியவர்கள் இங்கிருந்து நான்கு கிலோ மீட்டர் உடையாம்பாளையம் ஆரம்ப சுகாதார மையத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, கோவை மாநகராட்சி நிர்வாகம் உடன டியாக ரெட் பில் ரோட்டில் புதுப்பிக்கப் பட்ட ஆரம்ப சுகாதார மையத்தை மருத் துவமனையை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கவும், 24 மணி நேரம் மருத்துவம் பார்ப்பதற்கு, மருத்து வரையும் செவிலியர் நியமித்து இந்த பகுதி மக்களுக்கு மருத்துவ உதவி செய்யுமாறு கேட்டு கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரி வித்தனர்.  முன்னதாக இந்த கையெழுத்து இயக்கத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் கிழக்கு நகரக்குழு உறுப்பினர் த.நாக ராஜ், புலியகுளம் கிளை செயலாளர் கே. நாகராஜ், 64 சிபிஎம் கிளை செயலா ளர் மகேந்திரன், மாரிமுத்து, சக்திவேல், ராமமூர்த்தி, ஜெயா, சுமதி உள்ளிட்ட  திரளானோர் பங்கேற்றனர்.