districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

விவசாய நிலங்களை சேதப்படுத்திய யானை

கோவை, ஜூலை 25-  விவசாய நிலத்திற்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை  அங்குள்ள வாழை மற்றும் பாக்கு மரங்களை சேதப்படுத்தி  சென்றது. 

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி  யுள்ள தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி யில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதில், விவசாயம் மட் டுமே அப்பகுதி பொதுமக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் ஏற் பட்ட வறட்சியின் காரணமாக வனவிலங்குகள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கிராமங்கள் மற்றும் விவசாய  நிலங்களுக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து அப்பகுதியில் ஒற்றை யானை மற்றும் யானை கூட் டங்கள் நாள்தோறும் வந்து சேதப்படுத்தி செல்வது தொடர்  நிகழ்வாக உள்ளது. அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொது மக்கள் இதுகுறித்து வனத்துறையினரிடம் வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

வனத் துறையினர் வனத்துறை ஊழியர்களைக் கொண்டு  குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு  வந்தனர். யானை ஊருக்குள் மற்றும் விவசாய நிலங்களுக் குள் புகுந்து விட்டால் உடனடியாக வனத் துறையினருக்கு தக வல் தெரிவித்தால் சம்பவ இடத்திற்கு வந்து சென்று யானை களை வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வரு கின்றனர். இந்நிலையில், தொண்டாமுத்தூர், தடாகம் பகுதி யைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கடந்த 25 ஆண்டுக ளுக்கு மேலாக தீனம் பாளையத்தில் விவசாயம் செய்து வரு கின்ற நிலையில், அப்பகுதியில் புதனன்று இரவு புகுந்த ஒற்றை காட்டு யானை தோட்டத்தில் பயிரிட்ட வாழை மற்றும்  பாக்கு மரங்களை சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

காட்டுப்பன்றி இறைச்சி விற்க முயற்சி 

கோவை, ஜூலை 25- வாகனம் மோதி இறந்த காட்டுப்பன்றியின் இறைச்சியை  விற்க முயன்ற இருவரை வனத்துறையினர் கைது செய்து அப ராதம் விதித்தனர்.

கோவை மாவட்டம், வனச் சரகம் தடாகம் மத்திய மாங் கரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று காட்டு  பன்றியின் மீது மோதி உள்ளது. இதனை தடாகம் குட்டவெ ளியை சேர்ந்த மருதாச்சலம் மற்றும் ரங்கநாதன் ஆகிய இருவ ரும் யாருக்கும் தெரியாமல் ஆள் நடமாட்டம் இல்லாத  பகுதிக்கு காட்டுப்பன்றியை எடுத்துச்சென்று வெட்டி இறைச் சியை விற்க முயற்சி செய்துள்ளனர். இதுகுறித்து வனத்து றையினருக்கு தகவல் கிடைக்கவே, வனத்துறையினர் அப்ப குதிக்கு சென்று அந்த இருவரை பிடித்து விசாரணை மேற் கொண்டனர். பின்னர், 15 கிலோ இறைச்சியை கைப்பற்றி,  அந்த இருவருக்கும் ரூ. 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த னர்.

காவல் நிலையத்திற்கு முதலமைச்சர் விருது

உதகை, ஜூலை 25- நீலகிரி மாவட்ட சிறப்பு காவல் நிலையமாக  உதகை மத் திய காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான முத லமைச்சர் விருதை, காவல் ஆய்வாளர் பெற்றுக்கொண்டார். நீலகிரி மாவட்டத்தில் 36 காவல் நிலையங்கள் உள்ளது.  இதில், 1300 காவல் துறையினர் பணியாற்றி வருகின்றனர். காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், பதிவு செய்யப்படும் வழக்குகள் மற்றும் கண்டுபிடிக்கப்படும் குற்ற  வழக்குகள், காவல் நிலையத்தில் தினசரி செய்யப்படும் பணி களை வைத்து சிறந்த காவல் நிலையத்திற்கான மதிப்பீடு கள் வழங்கப்படும். அதன்படி நீலகிரி மாவட்ட அளவில் 2023-  ஆம் ஆண்டுக்கான சிறந்த காவல் நிலையமாக உதகை மத் திய காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து சிறப்பு காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு, முதலமைச்சர் விருதை, ஆய்வாளர் முரளி தரன் பெற்றுக்கொண்டார். சிறந்த காவல் நிலையமாக தேர்வு  செய்யப்பட்ட விருதை ஆய்வாளர் முரளிதரன் நீலகிரி காவல்  போலீஸ் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேலுவிடம் காட்டி வாழ்த்து பெற்றார். மேலும், உதகை மத்திய காவல் நிலை யத்திற்கு பல்வேறு காவல் துறையினறும் வாழ்த்து தெரிவித் துள்ளனர்.

அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூலை 25- தமிழ்நாட்டை புறக்கணித்திருக்கும் ஒன் றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து கோவை யில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கிணத்துக்கடவு வட்டக்கிளை சார்பாக  ஒன்றிய அரசை கண்டித்து, வியாழனன்று  கிணத்துக்கடவு,  நல்லட்டிபாளையம் ஆரம்ப  சுகாதார நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்டக் கிளைப் பொருளாளர் வி.ஹெச்.சாந்தி  தலைமை வகித்தார். இதில், ஏராளமானோர் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.