districts

img

பணி செய்யவிடாமல் தடுக்கும் ஆதிக்க சாதியினர் ஆட்சியரிடம் ஊராட்சி ஒன்றிய தலைவர் புகார் மனு

கோவை, டிச. 15- கோவையில் சாதி ஆதிக்கத்தோடு பணி செய்யவிடா மல் நடந்துகொள்ளும் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் மீது ஒன்றிய தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் தார்.  கோவை மாவட்டம், தேவராயபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவராக இருப்பவர்  சுந்தரி தங்கவேல். இவரை பணி செய்ய விடாமல் சாதி ஆதிக்க மனபாவத்தோடு நடந்து கொள்ளும் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பி.டி.கிருஷ்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவரால் தனது குடும்பத்தினருக்கு ஆபத்து இருப்ப தால் காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் சுந்தரி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், சமூக நீதிக்கட்சி இந்திய மாண வர் சங்கம் ஆகிய அமைப்பினர் மனு அளித்தனர்.

;