ஈரோடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் பார் அசோசியேசன் தேர்தல் கடந்த ஏப்.25ஆம் தேதி நடைபெற்றது. அதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் பி.ரமேஷ் குமார், செயலாளர் ஆர்.வேலுச்சாமி, பொருளாளர் பி. வெங்கடாசலம் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா புதனன்று நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. வழக்கறிஞர்கள் ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.