கோவை, மார்ச் 29- கோவை அரசு கலைக்கல்லூரில் மாணவிகளின் கழிப்பறை சுகாதார மின்றி காணப்பட்ட நிலையில், இந் திய மாணவர் சங்கத்தினர் போராட்ட அறிவிப்பு விடுத்திருந்தனர். இத னையறிந்த கல்லூரி நிர்வாகம், உடன டியாக சீரமைத்து தருவதாக உறுதிய ளித்தது. இதனையடுத்து போராட் டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டது. கோவை அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பயின்று வருகின்றனர். மாணவிகள் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். ஆனால், மாணாக்கர் களுக்கான கழிப்பறை சுகாதார மின்றி காணப்படுவதால், மாணவர் கள் பெரும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். கல்லூரி வகுப்பறை வரை யில் கழிவறையின் துர்நாற்றம் வீசு கிறது. மாணவர்கள் பலர் கழிவறைக்கு செல்லாமலேயே சுமார் 6 மணி நேரம் வரையில் அடக்கிவைக்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக, மாணவி களுக்கான கழிப்பறையில் நாப்கின் எரிப்பதற்கான இயந்திரம் இல்லாத தால், கழிவறை முழுவதும் நாப்கின் சிதறிக்கிடக்கின்றன. மேலும், மாண விகளுக்கென்று கட்டப்பட்ட கழிப் பறைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல், காட்சிப்பொருளா கவே உள்ளது. இதையடுத்து இந்திய மாணவர் சங்கத்தினர் இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் பலமுறை முறையிட் டும், எந்தவித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை.
இதனால், ஆவேச மடைந்த மாணவர்கள், போராட்டத் தில் ஈடுபட வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினரிடம் கோரிக்கை விடுத்த நிலையில், போராட்ட அறி விப்புவிடுக்கப்பட்டது. மேலும், போராட்ட அறிவிப்பு மற்றும் மாண விகளுக்கான கழிப்பறையின் உண்மை நிலை குறித்து சமூக வலை தளங்களில் அறிவிப்பு வெளியானது. ஆனால், கல்லூரி நிர்வாகம் இது உண்மை இல்லை என மாணவர்களி டம் தெரிவித்து, அதனை பகிர வேண்டாம் என மிரட்டும் தொணி யில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திட்டமிட்டப்படி இந் திய மாணவர் சங்கத்தின் தலைமை யில் மாணவர்கள், புதனன்று மதியம் போராட்டத்திற்கு தயாரகினர். அப் போது, கல்லூரி நிர்வாகம் வரும் செவ்வாய்கிழமைக்குள் இப்பிரச்ச னைக்கு தீர்வு காணப்படும் என உறுதி யளித்தது. இதுகுறித்து மாணவர் சங்கத்தி னர் கூறுகையில், திட்டமிட்டப்படி மாணவர்கள் போராட்டத்திற்கு தயாரான நிலையில், மாணவர்களின் கோரிக்கைகளுக்கு கல்லூரி நிர்வா கம் அடிபணிந்துள்ளது. இது மாண வர்களின் வெற்றி. அதேசமயம் கல் லூரி நிர்வாகம் உறுதியளித்தப்படி நடக்கவில்லையெனில், பெருமள வில் மாணவர்களை திரட்டி போராட் டத்தில் ஈடுபடுவோம், என்றனர்.