districts

img

ஆசிரியர் இயக்க முன்னோடி செ. நடேசன் படத்திறப்பு விழா

திருப்பூர், டிச. 18- தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்  கூட்டணியின் ஸ்தாபகத் தலைவர் களில் ஒருவரும் முன்னாள் பொதுச் செயலாளர் செ.நடேசன் படத்திறப்பு விழா திருப்பூரில் நடைபெற்றது. திருப்பூர் வாலிபாளையம் சேம்பர்  ஹாலில் ஞாயிறன்று தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின்  சார்பில் படத்திறப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. மாவட்டத் தலைவர் இரா.ராஜ்குமார் தலைமை ஏற்றார். மாவட்டச்  செயலாளர் அ.பிரபு செபஸ்டியான் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் பா.கனகராஜா மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் மாநில பொதுச் செயலாளர் சா. மயில், ஆசிரியர் செ.நடேசன் திருவுரு வப்படத்தை திறந்து வைத்தார். மாநிலத் தலைவர் மு.மணி மேகலை, துணைப் பொதுச் செய லாளர் தா. கணேசன், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுக்குழு உறுப்பினர் தோ.ஜான் கிறிஸ்துராஜ், மாநில பொருளாளர் ஜி.மத்தேயு, மாநிலச் செயலாளர் எஸ்.சுனில் குமார், மாநிலத் துணைத் தலைவர் ஜே.அருள் சுந்தர ரூபன், ஓய்வு பெற்ற  பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத் தின் மாவட்டச் செயலாளர் சி. ஜெய பிரகாசம் உள்ளிட்ட நிர்வாகிகள் இந் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆசிரியர் நடேசன் பணிகளையும் அவரது அர்ப்பணிப்பான உழைப்பையும் புகழ்ந்துரைத்தனர். நிறைவாக மாவட்ட பொருளாளர் பா. ஜெயலட்சுமி நன்றி கூறினார்.