districts

img

தமிழகம், புதுச்சேரி நாற்பதும் இந்தியா கூட்டணிக்கே - ஜி.ராமகிருஷ்ணன் உறுதி

தருமபுரி, ஏப்.10- ஊழல் அம்பலமானதால் பதட்டத்தில் உள்ள பாஜக, தில்லி முதல்வர் கெஜ்ரிவால், ஜார் கண்ட் மாநில முதல்வர் சிபுசோரன் ஆகியோரை கைது செய்து, பிரச்சனையை திசைதிருப்ப பார்ப்ப தாக சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.  தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் அ.மணியை ஆத ரித்து, பென்னாகரத்தில் சிபிஎம் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பிரச்சா ரம் மேற்கொண்டார். முன்னதாக அவர் செய்தி யாளர்களிடம் பேசுகையில், கடந்த 2019 ஆம்  ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 39ல் 38 திமுக கூட்டணி வெற்றிபெற் றது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றிபெற வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டிற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக 7  ஆவதுமுறையாக மோடி வந்துள்ளார். சென் னையைச் சுற்றி 4 மாவட்டங்களும் தூத்துக்குடி யைச் சுற்றி 4 மாவட்டங்களும் வெள்ளத்தால் கடி மையாக பாதிக்கப்பட்டது. வெள்ள நிவாரணமாக தமிழ்நாடு அரசு ரூ 37 ஆயிரம் கோடி கேட்டனர். தற்போது வரையில் ஒரு ரூபாய் கூட கொடுக்க வில்லை. கடுமையான வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட போதும் மோடி வரவில்லை.  அதேபோல் மனிப்பூர் மாநிலத்தில் பழங்குடி மக்கள் கலவரத்தால் தாக்கப்பட்டனர். 200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது, அந்த மாநிலத்திற்கும் பிரதமர் மோடி செல்லவில்லை. ஆனால், தேர்தலுக்காக ஓட்டு கேட்டு 7 முறை தற்போது தமிழ்நாட்டிற்கு மோடி வந்துவிட்டார்.  இந்தியா கூட்டணி கட்சிகளின் ஊழலை மறைக் கவே பிரச்சாரம் செய்வதாக மோடி பேசியுள்ளார். உண்மையிலேயே உலகத்திலேயே ஊழல் மகா கட்சி பாஜக தான், ஊழலையே சட்டபடியான ஊழலை செய்தது பாஜக. 2017 ல் தேர்தல் நிதி  பத்திரம் பாஜக உருவாக்கிய போது, வருமான வரி சட்டம், தேர்தல் நடத்தும் சட்டம், வெளி நாட்டு நிதிபராமரிப்பு சட்டம் ஆகிய 5 சட்டங் களை பாஜக திருத்தியது. ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா சட்டத்தை திருத்தினார்கள். இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி வழக்கு தொடுத்தது. இந்த திட்டம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது ஊழலுக்கு வழிவகுக்கும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் சொல்லியது.  மீண்டும் மீண்டும் உச்சநீதிமன்றம் கொடுத்த அழுத்தத்தினால் தேர்தல் பத்திர நிதி குறித்த விப ரம் வெளியிடப்பட்டது. அந்த விபரத்தின் அடிப் படையில் மிகப்பெரிய ஊழல்கட்சியாக பாஜக அம் பலப்பட்டுள்ளது. குறிப்பாக 38 கம்பெனிகள் 179 கன்ட்டிராக்ட் பெற்று ரூ 3 இலட்சத்து 80 ஆயிரம் கோடி பெருமான காண்டிராக்ட் பெற்றுள்ளனர்.தேர்தல்நிதி பத்திரத்தில் ரூ.16492 கோடி நிதி பெரும் முதலாளிகள் கொடுத்துள்ளனர். இதில்  ரூ.8252 கோடி பாஜகவுக்கு தேர்தல் நிதி பத்திர மாக பெற்றுள்ளது.  இப்படி ஊழல் செய்த பிரதமர் மோடிதான் மற்ற தலைவர்களை பார்த்து ஊழல் செய்வதாக பொய் பிரச்சாரம் செய்கிறார். இந்த ஊழல் அம்ப லமானதால் பதட்டத்தில் தில்லி முதல்வர் கெஜ்ரி வால், சிபுசோரன் ஆகியோரை கைது செய்கின்ற னர். இதற்கு மேலாக காங்கிரஸ் கட்சியின் 11  வங்கி கணக்குகளை முடக்கி விட்டனர். முதல்வர் கள் கைது செய்வதற்கான ஆதாரங்கள் நிரூ பிக்கவில்லை.  பாஜக ஆட்சிக்கு வந்தால் 2 கோடி பேருக்கு  வேலை என்று சொன்னார்கள் 10 வருடத்தில் 20 கோடி பேருக்கு வேலை வழங்கியிருக்கவேண்டும் வழங்கவில்லை விவசாயிகளின் வருமானத்தை  இரட்டிப்பு ஆக்குவோம் என்றார்கள். ஆனால்,  விவசாய சட்டதிருத்தம் கொண்டு வந்தனர். இதனை விவசாயிகள் போராடி முறியடித்தனர். உலகத்திலேயே பொருளாதார ஏற்றதாழ்வுகளில் நம்பர் 1 ஆக இருப்பது இந்தியா. இப்படிபட்ட சூழ லில்தான் பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்று பிரச்சாரம் செய்கிறோம். இன்று பாஜக கூட்ட ணிக்கு தென்னிந்தியா மட்டுமல்லாமல் வடமாநி லங்களில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.  தமிழ்நாட்டை பொறுத்த அளவில் அதிமுக, பாஜக அணி தனித்தனியாக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்ற நாளில் இருந்து பாஜகவின் அனைத்து திட்டங்களையும் ஆதரித்தது. குறிப்பாக குடியுரிமைத் திருத்த சட் டம் காஷ்மீர் 370 சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகிய வற்றை மக்களவையில் பாஜகவுக்கு மெஜாரிட்டி இருந்தது மாநிலங்களவையில் அதிமுக பாமக வும்  ஆதரித்து வாக்களித்ததால் மசோதா வெற்றி பெற்றது. மதரீதியில் பிளவு ஏற்படுத்தும் மசோ தாவுக்கு அதிமுகவும் பாமகவும் வாக்களித்தது.இவர்கள் இருவரும் ஆதரிக்கவில்லை என்றால் சட்டமே வந்திருக்காது. முழுக்க முழுக்க பாஜ கவை ஆதரித்து விட்டு அதிமுக தற்போது எதிர்க்கி றோம் என்கிற நாடகம் எடுபடாது. 10 ஆண்டுகாலம் மக்களுக்கு எதையும் செய்யாத பாஜக அணி ஒரு போதும் வெற்றிபெற முடியாது, 40 தொகுதிகளி லும் இந்தியா கூட்டணி வெற்றிபெறும். இரண் டாம் இடத்தை பிடிக்கத் தான் அதிமுகவும் பாஜக வும் போராடி வருகிறது என்றார். இப்பேட்டியின் போது மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். மாரிமுத்து, எஸ்.கிரைஸாமேரி, மூத்த தலைவர் பி. இளம்பரிதி ஆகியோர் உடனிருந்தனர்.