districts

img

கால்நடை மருத்துவமனைகளில் கலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாடு கோரிக்கை

 தாராபுரம், ஜூலை 17-  தாராபுரம் தாலூக்காவில் உள்ள கால் நடை மருத்துவமனைகளில் கலியாக உள்ள  மருத்துவர் பணியிடங்களை நிரப்பவேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தாரா புரம் வட்ட இரண்டாவது மாநாடு குண்டடம் அருகில் உள்ள மேட்டுக்கடையில் நடைபெற் றது. மாநாட்டுக்கு ஆர்.அங்கமுத்து தலைமை வைத்தார். நிர்வாகிகள் சின்ன துரை, பழனிச்சாமி, கனகராஜ், துரைசாமி, பிரகாஷ், சுப்பிரமணியன், நடராஜ் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.  அஞ்சலி தீர்மா னத்தை கே.ரத்தினகுமார் வாசித்தார். அ. பாரதி வரவேற்றார். சங்கத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் சிறப்புரை ஆற்றினார். தாலுகா செயலாளர் ஆர்.வெங்கட்ராமன் வேலையறிக்கையை முன் வைத்து உரையாற்றினார். பொங்கலூர் ஒன் றிய செயலாளர் ஆர் பாலன். வேங்கிபாளை யம் பெ.துரைசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இம்மாநாட்டில்  குண்டடம் வட்டாரத்தில் விவசாய பம்பு செட்டு களுக்கு 6 அல்லது 7 மணி நேரம் மட்டும்தான்  மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. கடந்த காலத்தில் 24 மணி நேரமும் மும் முனை மின்சாரம் வழங்கப்பட்டது. தற்போது  குறைந்த நேரமே மின்சாரம் வழங்கப்படுவ தால் விவசாய பயிர்களுக்கு நீர் பாய்ச்சு வது பாதிக்கப்படுகிறது.  

ஆகவே, குண் டடம் வட்டாரத்தில் 24 மணி நேரமும் மும் முனை மின்சாரம் வழங்க மின்சார வாரியம்  நடவடிக்கை எடுக்க வேண்டும். தாராபுரம் தாலுக்கா பகுதியில் உள்ள கால்நடை மருத்து வமனைகளில்   மருத்துவர் உள்ளிட்ட பணியி டங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் தனியார் மருத்துவரை நாட  வேண்டியுள்ளது. இதற்கு அதிக பொருட்  செலவு ஏற்படுகிறது. ஆகவே, காலியாக  உள்ள மருத்துவர் உள்ளிட்ட பணியிடங் களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க  வேண்டும். தாராபுரம் வட்டத்தில் இந்த  ஆண்டு வெங்காயம் சாகுபடி செய்த விவசா யிகளுக்கு உரிய விலை கிடைக்காமல்  கடும்  நஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளதால் அரசு  வேளாண்மைத் துறை மூலம் கணக்கெ டுத்துப் பயிர் பாதிப்புக்கு உடனடியாக  நஷ்ட  ஈடு வழங்க வேண்டும். பால் கொள்முதல்  விலை 2019 க்கு பின்பு உயர்த்தப்படவில்லை. இதனால், கறவை மாடு வைத்து பால் கறக்கும் விவசாயிகளுக்குத் தவிடு, புண் ணாக்கு, கலப்பு தீவனம் உள்ளிட்ட இடுபொ ருட்கள் கடுமையாக விலை அதிகரித்துள்ள நிலையில்  கொள்முதல் விலை  கட்டுபடியாக  நிலை உள்ளது.

ஆகவே, பசும்பாலுக்கு லிட்ட ருக்கு ரூ 41-க்கும் எருமைப் பாலுக்கு ரூ.52-க் கும் ஆக உயர்த்தி வழங்க வேண்டும். பல  தலைமுறைகளாகக் கோவில் நிலங் களில் விவசாயம் மற்றும் குடியிருந்துவருப வர்களுக்கு நிலத்திற்கு உரிய நியாயமான விலையை தீர்மானித்து தவணை முறையில் பெற்றுக் கொண்டு அவர்களுக்கே சொந்த மாக்கித் தர வேண்டும். அச்சுறுத்தி வெளி யேற்றும் நடவடிக்கையைக் கைவிட வேண் டும். உயர்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப் பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் அர சாணை 54/2020ன்படி  நஷ்ட ஈடு வழங்க வேண்டும். கிராமத்தின் உயர்ந்தபட்ச வழி காட்டி மதிப்பைக் கணக்கில் எடுத்துக் கொண்டு இழப்பீடு கணக்கீடு செய்து வழங்க  வேண்டும், மாத வாடகை வழங்க வேண்டும்.  தாராபுரம்-வீராட்சிமங்கலம் பகுதியில் நெல் கொள்முதல் மையம் துவக்க வேண்டும் உள் ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. இதைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தலைவராக பெரிய புத்தூர் நடராஜ், செயலாளராக ஆர்.வெங்கட் ராமன், பொருளாளராக சி.துரைசாமி, துணை  தலைவராக கே.ரத்தினகுமார்  துணை செய லாளராக பெ.துரைசாமி மற்றும் 11 பேர்  கொண்ட குழு அமைக்கப்பட்டது. முடிவில் துரைசாமி நன்றி தெரிவித்தார்.