districts

img

கூடுதல் கட்டணம் வசூல்: சிபிஎம் நூதன போராட்டம்

சேலம், அக்.20- சேலம் புதிய பேருந்து நிலை யத்தில் உள்ள மாநகராட்சி கட்டண  கழிவறைக்கு கூடுதல் கட்டணம் வசூ லிப்பதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது.  சேலம் புதிய பேருந்து நிலை யம் பகுதியில் மாநகராட்சி சார்பில் ஐந்திற்கும் மேற்பட்ட கட்டண கழி வறைகள் உள்ளது. இக்கழிவறைக்கு கட்டணம் நிர்ணத்து ஒப்பந்தத்திற்கு விடப்பட்டுள்ளன. ஆனால், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமகு கள் மற்றும் பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதை யறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் சொம்பு ஏந்தி ஆர்ப்பாட் டம் புதனன்று நடைபெற்றது. சேலம்  போக்குவரத்து பணிமனை முன்பி ருந்து மார்க்சிஸ்ட் கட்சியினர் சொம்பு  ஏந்தி பேரணியாக பேருந்து நிலை யத்தில் உள்ள கழிவறை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப் பாட்டத்திற்கு, வடக்கு மாநகர குழு உறுப்பினர் ஆர்.வி.கதிர்வேல் தலைமை வகித்தார்.  இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மாநகராட்சி நிர்ணையத்த கட்டணம் குறித்த பலகையை கழிவறை முன்பு வைத்தனர். இதையடுத்து ஆர்ப்பாட் டம் நிறைவடையும் போது வடிவேல் என்பவர் சில அடியாட்களுடன் வந்து, நான்தான் இக்கழிவறை நடத்தி வரு கிறேன். கட்சிகாரர்கள், பத்திரிக்கை யாளர்கள் சிலர் வந்து பண்டிக் கைக்கு பணம் கேட்டு தொல்லை  கொடுப்பதால் கட்டணம் சேர்த்து வாங் குகிறோம் என போலீசார் முன்னிலை யிலேயே வாக்குவாதம் செய்தனர்.  இதுகுறித்து போலீஸ் அதிகாரி களிடம் மூன்று முறை புகார் கொடுத் துள்ளதாக கூறினார். அதனை கேட்ட ஆர்பாட்டகாரர்கள் நீங்க மாமுல் கொடுக்க பொதுமக்களிடம் வழிபறி செய்வது நியாயமா?, உங்களிடம் பணம் கேட்டு தொல்லை செய்யும் நபர்கள் யார் என்று சொல்லுங்க உங்களோடு சேர்ந்து நாங்களும் வருகிறோம் போராடலாம் என அழைத்தபோது நழுவி சென்றுவிட் டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற் பட்டது.  தொடர்ந்து சேலம் புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி அறிவித்த கட்டணத்திற்கு மேல் கட்டண கழிப் பிடங்களில் வசூல் வேட்டை நடத் துவதை அதிகாரிகள் தடுக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கேட் டுக்கொண்டனர். இதில் சிபிஎம் வடக்கு மாநகர செயலாளர் என்.பிர வீன் குமார், மாநகர குழு உறுப்பி னர் வெங்கடேஷ் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர்.