districts

img

உதகை: சாலையை சீரமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை

உதகை, பிப்.1- பைக்காரா படகு இல்லத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  உதகை, கூடலூர் சாலையில் உள்ளது பைக்காரா அணை. இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை கொண்டு மின் உற் பத்தி செய்யப்பட்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், அணையில் படகு சவாரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பின்னர் பைக்காரா படகு இல்லமாக செயல்பட்டு வருகி றது. தற்போது கோடை சீசன் துவங்க வுள்ள நிலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பய ணிகள் பைக்காரா படகு இல்லத் துக்கு வந்து செல்கின்றனர். இதற்கிடையே, உதகை -கூட லூர் சாலையில் இருந்து சுமார் 2  கிலோ மீட்டர் தூரம் வனப் பகுதி வழியாக பைக்காரா படகு இல்லத் துக்கு செல்ல சாலை ஒன்று உள் ளது. வனத்துறை சார்பில் ஜீப் மற் றும் கார்களுக்கு ரூ.15,  இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.5,  வேன் களுக்கு ரூ.30 என நுழைவு கட்ட ணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், இந்த சாலையானது கடந்த பல மாதங்களாக மிகவும் குண்டும், குழியுமாக காட்சியளித்து வரு கிறது. ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடி யாத நிலையில் உள்ளது. இத னால் அந்த வழியாக செல்லும் சுற்று லாப் பயணிகள் மிகவும் சிரமத்திற் குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வ லர்கள் கூறுகையில்:- நீலகிரி மாவட் டத்தில் கோடை சீசனை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட் டங்கள் மற்றும் கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் தினமும் பைக்காரா படகு இல்லத்துக்கு வாகனங்களில் வந்து செல்கிறார்கள். சாலை பழு தடைந்து காணப்படுவதால் வாக னங்களின் டயர்களை பதம் பார்க் கும் நிலை உள்ளது. அப்படி வாகனங்களில் பழுது ஏற்பட் டால், அதனை சரிசெய்ய கூட இங்கு எந்தவிதமான வசதி களும் இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.  இன்னும் சில சுற்றுலா பயணி கள் கூடலூர் சாலையில் வாகனங் களை நிறுத்தி விட்டு பைக்காரா படகு இல்லத்துக்கு நடந்தே செல் கின்றனர். இதனால் சாலைகளில் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப் படுவதால் போக்குவரத்து பாதிப்பு  ஏற்படுவதோடு, விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, பைக் காரா படகு இல்லத்துக்கு செல்லும் வாகனங்களுக்கு நுழைவு கட்ட ணம் வசூலிக்கப்படும் அதேநேரத் தில்,  பழுதடைந்த சாலையையும் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என தெரிவிக்கின்றனர்.