கோவை, ஆக. 20- டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு, கொசு மருந்து அடிக்கும் இயந்திரமும், கொசு மருந்து அடிக் கும் வாகனத்தினை மாநகராட்சி ஆணையாளர் வழங்கி னார். கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு 50 எண் ணிக்கையிலான கையடக்க கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் மற்றும் கொசு மருந்து அடிக்கும் வாகனத் தினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாக ரன் முன்னிலையில், மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்தி ரன் ஆகியோர் செவ்வாயன்று வழங்கினார். உடன் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார். பொது சுகாதார குழுத் தலைவர் பெ.மாரிசெல்வன், மாநகர நல அலுவலர் (பொ) மரு.கே.பூபதி, மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள் ளனர்.