districts

img

கோடைக் கால கலைப் பயிற்சி

ஈரோடு, ஏப். 28- ஈரோடு ஜவகர் சிறுவர் மன்றத்தில் கோடைக் கால கலைப்  பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. ஐந்து முதல் பதினாறு வயதுக்கு உட்பட்ட பள்ளிக் கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு கலைப் பயிற்சிகள் வழங் குதல், அவர்களின் கலைத் திறமைகளை வெளிக்கொ ணர்தல், கலைக்கல்வி வழங்குதல் ஆகியவற்றை முக்கிய  நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் ஜவகர் சிறுவர்  மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. கோயம்புத்தூர் மண்டலத்தின் கீழ் செயல்படும் ஈரோடு மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றத்தில் பரதநாட்டியம், குரலிசை,  கீபோர்டு மற்றும் ஓவியம் ஆகிய கலைகளில் 5 வயது முதல்  16 வயது வரை உள்ள மாணவர்களுக்கு வாரந்தோறும் சனியன்று மாலை 4.30 மணிமுதல் 6.30 மணி வரை மற்றும்  ஞாயிறன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை பயிற்சி  அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஈரோடு, பவானி சாலை, பி.பெ.அக்ரஹா ரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு இசைப்பள்ளியில் செயல்பட்டு வரும் ஜவகர் சிறுவர் மன்றத்தில், மாண வர்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் வருகிற 1 ஆம் தேதி முதல் 20 வரை காலை பரத நாட்டியம், குரலிசை, கீபோர்டு மற்றும் ஓவியம் ஆகிய கலை களில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும், விவரங் களுக்கு 9842780608 அலைபேசி எண்ணில் தொடர்பு கொள் ளலாம்.