districts

img

பெண் யானை உயிரிழப்பில் திடீர் திருப்பம்

கோவை, மார்ச் 21- வரகளியாறு பகுதிக்கு சிகிச் சைக்கு கொண்டு வந்த பெண் யானை உயிரிழந்தது அவுட்டுகாய் வெடி வெடித்ததால்தான் என  உடற்கூறாய்வில் தெரியவந் துள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் அருகே உள்ள ஆதி மாதையனூர் கிராமத்தில் வாயில்  அடிபட்ட நிலையில் பெண் யானை  ஒன்று சுற்றி வருவதாக விவசாயி கள் வனத்துறையினருக்கு தெரி வித்தனர். அதன்பேரில் ஆனை மலை புலிகள் காப்பகம் யானை கள் வளர்ப்பு முகாமில் இருந்து சின்னத்தம்பி யானை உதவியுடன், பெண் யானையை மீட்கபட்டு வரகளியாறு பகுதியில் கால்நடை மருத்துவர்கள் குழு கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிக்சை பலனின்றி ஞாயிறன்று இரவு பெண் யானை உயிரிழந்தது. இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பகம்  கள இயக்குநர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் பெயரில், துணை கள  இயக்குநர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் குழு கொண்டு பெண் யானை உடற்கூறு செய்தது. இதில், காரமடை பகுதியில் பெண் யானை சுற்றியபோது, அடையாளம் தெரியாத நபர்கள் அவுட்டுகாய் வெடி வைத்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், வாயில் காயம் ஏற்பட்ட தால் கடந்த நான்கு வாரங்களாக யானை உணவு மற்றும் நீர் அருந்த வில்லை என்பதும், யானைக்கு வெடிவைத்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். உடற்கூறாய்வு செய்யப்பட்ட பகுதியிலிருந்து யானை கொண்டு செல்லப்பட்டு, ஜேசிபி இயந்திரம் மூலம் அடர் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.