districts

img

தண்ணீரில் மூழ்கிய பாலம்: மோட்டார் படகு இயக்கம்!

மேட்டுப்பாளையம், நவ.8- சிறுமுகை லிங்காபுரம் - காந்த  வயல் இடையிலான உயர்மட்ட மேம்பாலம் தண்ணீரில் மூழ்கிய தையடுத்து, கிராம மக்களின் நலன் கருதி மோட்டார் படகு இயக்கப் பட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் அருகே உள்ள சிறு முகை லிங்காபுரத்தை அடுத்து காந்தவயல், மேலூர், உளியூர், ஆலூர் உள்ளிட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இப்பகுதி களில் சுமார் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமங்களில் இருந்து மேட் டுப்பாளையம், சிறுமுகை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக் கும், மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வருகின்ற னர். இந்நிலையில் லிங்காபுரம் -  காந்தவயல் இடையே பவானி ஆற் றின் குறுக்கே உயர் மட்ட மேம்பா லம் கட்டப்பட்டது. கனமழை காரண மாக பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் போது இந்த மேம் பாலம் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி வந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவ திக்குள்ளாகினர். இதனை கருத்தில் கொண்டு லிங்காபுரம் - காந்தவயல் இடையே உள்ள பழைய பாலத்தின் அரு கிலேயே தற்போது ரூ.15.40 கோடி  மதிப்பீட்டில் பவானி ஆற்றின் குறுக்கே தற்போது புதிய மேம்பா லம் கட்டும் பணி நடைபெற்று வரு கிறது. இந்த பணிகள் ஏறத்தாழ 60 சத விகித முடிவடைந்துள்ள நிலையில் தற்போது பவானி ஆற்றில் நீர்வ ரத்து அதிகரித்துள்ளது. அதே  வேளையில் புதிதாக கட்டப்பட்டு  வரும் பாலத்தின் அருகிலேயே மக் கள் சென்று வர சாலை அமைக்கப் பட்டது. பவானியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இந்த சாலை யிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், இவ்வழியே செல்பவர் கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்த னர்.  இதனையடுத்து சிறுமுகை பேரூராட்சி தலைவர் மாலதி உதய குமார், செயல் அலுவலர் ரவிசங் கர் உள்ளிட்டோர் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த சாலையின் நீர்த்தேக்கத்தை கடந்து சென்று வர பரிசல் இயக்க உத்தர விட்டனர். இதனையடுத்து பரிசல் கள் இயக்கப்பட்டன. இதனிடையே ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதி கரித்து வருவதால் மோட்டார் படகு களை இயக்க கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத் தரவிட்டார். அதன்பேரில் வியாழ னன்று முதல் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலனை  கருத்தில் கொண்டு மோட்டார் படகு இயக்கப்பட்டது. லைஃப் ஜாக்கெட் அணிந்து மாணவர்கள் உற்சாகமா கவும், பாதுகாப்புடனும் பயணித்த னர்.