தருமபுரி, மார்ச் 29- கல்லூரி முன்பு அரசு மதுபானக்கடை திறக்க அனுமதிக்க கூடாது என வலியு றுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்ய தர்சினியிடம் கல்லூரி மாணவர்கள் மனு அளித்துள்ளனர். இதுதொடர்பாக அம்மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளதாவது, தருமபுரி மாவட் டம், தருமபுரி - பென்னாகரம் சாலையில் தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வரு கிறது. இந்த கல்லூரியில் 500க்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் இளங்கலை மற் றும் முதுகலை செவிலியர் பட்டப்படிப்பை பயின்று கொண்டிருக்கிறோம். மேலும், கல் லூரி வளாகத்திற்குள்ளேயே மாணவிகள் விடுதி அமைந்துள்ளது. இந்நிலையில், எங்கள் கல்லூரி முன்பு அரசு மதுபானக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதற்கு மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பின ரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்போது, மேலும் ஒரு மதுபானக்கடை திறக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. எனவே, எங்கள் கல்லூரி மாணவ, மாண விகளின் நலனை கருத்தில் கொண்டு புதிய மதுபானக் கடை திறப்பதை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள் ளது.