districts

img

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் மாணவர் வெள்ளம்

திருப்பூர், பிப்.3- 20 ஆவது திருப்பூர் புத்தகத் திரு விழாவில் சனியன்று பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாண வர்கள் வெள்ளமெனத் திரண்டு வந்து கண்டுகளித்தனர். தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர்  பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் 20 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா கடந்த ஜன.25 ஆம் தேதி காங்கேயம் சாலை வேலன் ஹோட்டல் வளாகத்தில் தொடங்கியது. 150க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு முன்னணி பதிப்பகங்கள், விற்பனையாளர்கள் புத்தகங்களை வைத்திருந்தனர். சனியன்று புத்தகத் திருவிழாவிற்கு திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவ, மாண விகள் அழைத்து வரப்பட்டிருந்தனர். வளாகம் எங்கும் சீருடை அணிந்த மாணவ, மாணவிகள் ஒவ்வொரு அரங்கத்திலும் புத்தகங்களை ஆர்வ முடன் பார்வையிட்டு, விரும்பிய புத் தகங்களை வாங்கிச் சென்றனர். மொத்தம் 11 நாட்கள் நடத்தப்படும் இந்த புத்தகக் கண்காட்சி ஞாயி றன்று (இன்று) நிறைவு பெறுகிறது. வழக்கமாக புத்தகத் திருவிழா நிறைவு பெறும் கடைசி சில தினங்க ளில் பார்வையாளர்கள் கூட்டம் அலை மோதும். குறிப்பாக சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பெண்கள், குழந்தை கள் உள்ளிட்டவர்கள் ஆர்வமுடன் அணிதிரண்டு வருவார்கள். சனியன்று  காலை மாணவ, மாணவிகள் கூட்டம்  ஆயிரக்கணக்கில் வந்திருந்தனர். அதேபோல் ஞாயிறன்றும் புத்தக ஆர்வலர்கள், பார்வையாளர்கள் கூட்டம் பெருமளவு வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. நிறைவு நாளிள் வெற்றித் தமிழர் பேரவை மற்றும் திருப்பூர் நகைச்சுவை மன்றம் சார் பில் நகைச்சுவை பட்டிமன்றம் நடை பெறுகிறது. நடுவர் மா.இராமலிங் கம் தலைமையில் இலக்கியங்கள் காலத்தை வென்று நிற்பதற்குக் கார ணம் கருத்து வளமா? கற்பனைத் திறனா? என்ற தலைப்பில் பட்டிமன் றம் நடைபெறுகிறது.