districts

img

அரசுப்பள்ளியில் மாணவர் தேர்தல் மாணவர்கள், பெற்றோர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்

கோவை, ஜூலை 6- கோவையில் அரசு துவக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான தேர் தல் புதனன்று நடைபெற்றது. இதில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர். கோவை மாவட்டம், கோட்டை மேடு பகுதியில் உள்ள நல்லாயன் அரசு துவக்கப்பள்ளியில் மாண வர்களின் எதிர்காலத்திற்கு பயன் படும் வகையில், தேர்தல் விதிமுறை கள் தேர்தல் நடத்தும் வழிமுறைகள், தேர்தலில் போட்டியிடும் முறைகள், பிரச்சாரம், வாக்களிக்கும் முறைகள் குறித்து தெரிந்து கொள்ளும் வகை யில் பள்ளி மாணவர் தேர்தல் நடை பெற்றது. இதில் பள்ளிக்கான 5  (மாணவர் தலைவர், துணை தலை வர், விளையாட்டு துறை, உணவுத் துறை, சுற்று சூழல்துறை) துறைக ளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. ஒவ் வொரு துறையிலும் 3 வேட்பாளர் கள் போட்டியிட்டனர். தேர்தல் நடை பெறும் முறை போலவே மாணவர் களுக்கு பூத் சிலிப் (மாதிரி) வழங் கப்பட்டு, விரலில் மையிட்டு, கணினி மூலம் வாக்கு பதிவு நடத்தப்பட்டது. இதில் பள்ளி 5 ஆம் வகுப்பு மாண வர்கள் வேட்பாளர்களாக போட்டி யிட்டனர். இந்த தேர்தலில், அப்பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வாக்களித்தனர்.  கடந்த 5 நாட்களாக வேட்புமனு தாக்கல், பிரச்சாரம் ஆகியவை மேற் கொள்ளப்பட்ட நிலையில், புதனன்று  தேர்தல் நடத்தப்ட்டது. மேலும், தேர் தல் முடிவுகள் வெள்ளியன்று (நாளை) அறிவிக்கப்பட உள்ளது. பள்ளி மாணவர்கள் தேர்தல் முறை கள் பற்றி இந்த சிறு வயதிலேயே அறிந்து கொள்ளும் வண்ணம் இது போன்று தேர்தல் நடத்தப்படுவது மிக வும் பயனுள்ளதாக இருக்குமென ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.