districts

img

மாணவி அனிதா நினைவு தினம் மாணவர் சங்கம் கடைப்பிடிப்பு

திருப்பூர், செப். 1- நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் நினைவு  தினம் வியாழக்கிழமை இந்திய மாணவர் சங்கத்தினரால்  கடைப்பிடிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக  அவிநாசி அரசு கலைக்கல்லூரி, சிக்கன்ணா அரசு கலைக்  கல்லூரி, எல்.ஆர்.ஜி அரசு கலைக் கல்லூரி, மற்றும் பல்ல டம் அரசு கல்லூரியில்  நினைவு அஞ்சலி மற்றும் புதிய கல்விக்  கொள்கை, நீட், க்யூட்  போன்ற தேர்வுகளுக்கு எதிரான உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.